Wednesday, March 23, 2011

சாயம் வெளுக்கும் மமக‌















கொஞ்சம் கொஞ்சமாய் வெளுக்க ஆரம்பித்து விட்டது மமகவின் சாயம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக‌ அரசியலில் இறங்கமாட்டோம் என தமுமுக வழி களம் கண்டவர்கள் இன்றைக்கு சைத்தானின் ஆசையில் மதிமயங்கி எப்படியாவது ஒரு பதவியைப் பிடித்து விடவேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் பூசியிருந்த இஸ்லாமிய சாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே எஸ்டிபிஐ அமைப்பு தங்களுக்கு கொள்கை குத்துப்பாடல்களை அமைத்து பீப்பி ஊதி ஊர்வலம் வருவதைப் போல இவர்களும் தங்களுக்கென ஒரு கொள்கைப்பாடல்களை வடிவமைத்து கொஞ்சமாக தங்களின் முகத்திரையை விளக்கினார்கள்.
கலைஞரிடம் 2 சீட்டு வாங்குவதற்காக அவருக்கு நன்றி அறிவிப்பு என்ற பெயரில் பாராட்டு விழா நடத்தி அவருக்கு சோப்பு போட்டு வக்ஃப் வாரியத்தையும் வளைத்துக்கொண்டு அம்மா தான் இஸ்லாமியர்களின் துரோகி, மோடியின் தோழி என பேட்டி கொடுத்து வந்தவர்கள் கடைசியாக 2 சீட்டு கொடுக்காமல் கலைஞரால் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளப்பட்டு நிர்கதியாக நின்ற போது தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம் கலைஞரின் இஸ்லாமிய துரோகங்கள்.

பின்னர் அம்மா செய்த துரோகங்கள் எல்லாம் மறந்து போய் இன்றைக்கு அன்புச்சகோதரி ஆகிவிட்டார் அம்மா. அன்றைக்கு சமுதாயக் காவலராக இருந்த கலைஞர் இன்றைக்கு சமுதாய துரோகி ஆகிவிட்டார். கலைஞர் தான் கைது செய்தார், கலைஞரின் துரோக வரலாறு என ஏகப்பட்ட செய்திகளை தங்களின் அதிகாரப்பூர்வ தளத்திலும், பத்திரிகையிலும் இப்போது போட்டு கிழிகிழி என கிழிக்கிறார்கள். கலைஞர் செய்ததாக இவர்கள் சொல்லும் துரோகம் அனைத்தும் இவர்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி பாராட்டு விழா நடத்தி பல்லைக்காட்டியதற்கு முன்பே, கலைஞர் தான் சமுதாயக் காவலர் என ஊர் ஊராய் போஸ்டர் ஒட்டி பேனர் வைப்பதற்கு முன்பே நடந்த நிகழ்ச்சிகள் தானே! அதெல்லாம் அப்போது எப்படி மறந்து போனது? இரண்டு சீட்டு தரவில்லை என்றதும் இஸ்லாமிய இன காவலர் என உங்களால் அடையாளம் காணப்பட்ட கலைஞர் இப்போது துரோகியாகிவிட்டார். துரோகியாகக் காட்டப்பட்ட அம்மா இன்றைக்கு அன்புச்சகோதரி ஆகிவிட்டார்.

இப்படியே இவர்களின் பச்சை அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து இன்றைக்கு முழுமையான அரசியல்வாதிகளாக ஆகிவிட்டார்கள். இவர்கள் தேர்தல் செலவுகளைச் செய்வதற்கு அப்பாவி மக்களிடம் கட்டாய வசூல் செய்ய உத்தரவிட்ட இந்த கட்டப்பஞ்சாயத்துக் கழகம் இப்போது நிர்ணயித்து இருக்கும் தொகை ஒரு கிளைக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய். இதை கழகத்தின் நிரந்தரத்தலைவரே நிதி தாரீர் என்ற பெயரில் அவரின் கழக அப்பாவித்தொண்டர்களுக்கு பகிரங்கமாக தெரிவித்து விட்டார். பாவம் இவர்கள்! பத்தாயிரத்துக்கு குறையாமல் நிதி சேகரிக்க சாதாரண கிராமப்புற கிளைகள் என்ன செய்வார்கள்?.

Monday, March 21, 2011

மமகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ஒரு சிறப்பு பார்வை





வரக்கூடிய தேர்தலில் மமகவின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் ஒரு கலந்தாய்வுக்கூட்டம் தமுமுகவின் மாநிலத் தலைமையில் நடந்தது. இந்தகூட்டத்தில் தமுமுக மற்றும் மமகவின் முக்கியப்பொருப்பாளர்கள் மற்றும் அணியினர் கலந்து கொண்டார்களாம். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமுமுக மற்றும் மமகவின் செயல்பாடுகள் வரும் தேர்தலில் எப்படி இருக்க வேண்டும் என்ற ரீதியில் கலந்துரையாடல் நடந்திருக்கிறது.

இந்தக்கலந்துரையாடலின் போது வரும் தேர்தலில் கழகத்தின் நிரந்தரத் தலைவரையும், நிரந்தர பொதுச்செயலாளரையும் எப்படியாவது எம்எல்ஏ ஆக்கிவிடவேண்டும் என்பதற்காக இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு அஇஅதிமுக கூட்டணிக்கு 234 தொகுதிகளிலும் கடுமையாக பாடுபட்டு உழைப்பது என்ற ரீதியில் முடிவுகள் எடுக்கப்பட்டதாம்.(பாவம்! இஸ்லாமிய சமுதாயம் 3 வாங்கிக்கொண்டு 300க்கு உழைக்கும் என்ற கேவல நிலையை உருவாக்கி விட்டார்கள் இந்த மமவினர்)

மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் கலந்து கொண்டவர்களின் வாதங்கள் மிகக் கடுமையாக இருந்ததாம். அதாவது நீங்கள் வெறும் 3 சீட்டுக்களை வாங்கிக்கொண்டு நம் சமுதாயத்திற்கே பெரிய தலைகுணிவை ஏற்படுத்தி விட்டீர்களே என்ற ரீதியில் கருத்துக்களை வெளிப்படுத்தினார்களாம்.(பரவாயில்லை தமுமுக தொண்டர்கள் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்) ஆனால் தமுமுகவின் நிரந்தரத் தலைவரும் நிரந்தரப் பொதுச்செயலாளரும் ரோஸ்டர் முறையை எப்படி நியாயப்படுத்தினார்களோ அதே போல சொந்தச்சின்னம் என்ற கருத்தை முன்வைத்து அவர்களைக் கூல் படுத்தினார்களாம்., இதை ஒப்புக்கொண்ட மாணவர் அணியினரும் வழக்கறிஞர் அணியினரும் தமுமுகவின் வெப்சைட்டில் கழகம் 3 சீட்டுக்கள் பெற்றதற்கு ஆதரவாக வந்த வெறும் 7 கருத்துகளை மட்டுமே தான் வெளியிட்டீர்கள், ஆனால் நீங்கள் 3 சீட்டு வாங்கியதற்கு எதிராக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருத்துக்களை ஏன் வெளியிடவில்லை எனக் கேட்டார்களாம். இந்த இடத்தில் விழி பிதுங்கி தலைவரும், பொதுச்செயலாளரும் விழிக்க , நிலைமையை உணர்ந்த தமீம் அன்சாரி ஒருவகையாய் சமாளித்தாராம்.

அதாவது எதிரிகள் (வேற யாரு?) கூட தவறான கருத்துக்களைப் பதிவுசெய்யலாம், பதிவும் செய்கிறார்கள்.,ஆகவே இதை நாங்கள் முறைப்படுத்தினோம் என்றார்களாம். உடனே பதில் தாக்குதல் நடத்திய மாணவர் அணியினர், நம் வெப்சைட்டில் இருக்கும் ஒவ்வொரு செய்திக்கும் எவ்வித கருத்துக்களையும் நீங்கள் வெளியிடுவதில்லை, இதைப்பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நீங்கள் ஏன் அறியவில்லை எனக் கேட்டார்களாம். அதையும் பூசி மெழுகிய அன்சாரி, உங்கள் தொகுதியில் வசூல் நிலவரம் எப்படி என்பதை கேட்க, இடைமறித்த மாணவர் அணியினர் எங்களுக்கு தேர்தல் குறித்து இன்னமும் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார்களாம். அனுமதி வழங்கப்பட்டவுடன் அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாம் கழகக்குழு.


அதாவது வரும் தேர்தலில் மாணவர் அணி சார்பில் ஒருவரும், வழக்கறிஞர் அணி சார்பில் ஒருவரும் போட்டியிட வேண்டும் என தெரிவித்தார்களாம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாமா குழுவினர் ஒரு ரகசிய செய்தியைப் போட்டு உடைத்தார்களாம். அதாவது சென்ற முறை வர்த்தகர் அணியில் தங்க முட்டையிடும் வாத்தாய் இருந்த பள்ளிவாசல் மூடிய ஊர்காரரை கழகம் கண்டுகொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் தான் ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டார். அவரைப் போல இனி யாரும் கழகத்தைவிட்டு கழன்று விடக்கூடாது என்பதற்காக இம்முறை வர்த்தகர் அணிக்கு ஒரு சீட்டு ஒதுக்குவது என கழகம் முடிவெடுத்திருக்கிறது.


எனவே மிச்சமிருப்பது இரண்டு சீட்டு தான் (ஒன்னு உனக்க்க்க்கு, இன்னொன்னு எனக்க்க்க்கு). எனவே இனி வேறு நபர்களுக்கு ஒதுக்குவது சிரமம் என நிரந்தர தலைவர் விளக்க, தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்த மாணவர் அணியினர் முடியவே முடியாது என சொல்லியிருக்கின்றனர். அத்தோடு பேசிய அவர்கள் நீங்களும், பொதுச்செயலாளரும் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டுயிட்டு விட்டீர்கள். எனவே நீங்கள் திரும்ப சட்டமன்றத்திற்கு போட்டியிடுவது தகுதி குறைவாக இருக்கும். அத்தோடு கழகத்திற்கு வரும் பதவிகளை எல்லாம் நீங்கள் மட்டுமே அனுபவிக்கிறீர்கள், இதனால் தான் உங்களை எதிரிகள் பதவி வெறி பிடித்தவர்கள் என தூற்றுகிறார்கள். அதுமட்டுமின்றி ஐநா சபையிலேயே ஆங்கில புலமையாற்றிய நீங்கள் தான் நாடாளுமன்றம் போக மிகத்தகுதியான நபர் (கழகத்தின் நிரந்தரத் தலைவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அதாவது நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு முன்னதாக ஊருக்கு ஊர் சென்று மீட்டிங் போட்டார். அதிலே அவர் பேசிய பேச்சுக்கள், " " நாடாளுமன்றத்திற்குச் சென்று நம்முடைய குறைகளை ”Mr.Prime Minister, What about our Reservation?”“ என்று ஆங்கிலத்திலே கேட்பதற்கு ஆள் இல்லையே! என்று சொன்னாரு.

அப்ப நாம நெனச்சோம், சே! தலைவர் இன்னாமா பீல் பண்ணி கூவுறாருன்னு, அப்பறம் தான தெரிஞ்சது ,அந்த இங்கிலிபீசு பேசுற ஆளுன்னு அவரத்தான் சொன்னாருன்னு) எனவே நீங்கள் தான் நாடாளுமன்றம் செல்லத் தகுதியான நபர். அதுமட்டுமின்றி உங்கள் மற்றும் பொதுச்செயலாளரின் வழிகாட்டுதல் கழகத்திற்கு அவசியம் தேவை. எனவே நீங்கள் வெளியே இருந்து வழிகாட்டினால் தான் எங்களைப் போன்ற இளைஞர்கள் நாளை இந்தக் கழகத்தைக் கட்டிக்காகக் இயலும் எனவும் வலியுறுத்தினார்களாம். இதைக்கேட்டு நிரந்தர தலைவரும், பொதுச்செயலாளரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே அமைதி காக்க ஆடிப்போனதாம் கழகத்தின் சபை.


நீண்ட நேர மௌணத்திற்கு பிறகு இதைப்பற்றி இஷா தொழுகைக்குப் பின் முடிவெடுக்கலாம் என்ற ரீதியில் பெருந்தலைகள் இழுத்துவிட, மாணவர் அணியும், வழக்கறிஞர் அணியும் இஷா தொழுகை வரை காத்திருந்ததாம். ஆனால் இஷா முடிந்தும் ஒரு முடிவை அறிவிக்காமல் காலம் கடந்து செல்லவே கடைசியில் நாளை முடிவு சொல்கிறோம் என கழகத்தினர் இவர்களை அனுப்பிவைத்தார்களாம். இதற்கிடையில் இரவோடு இரவாக மாணவர் அணியைச் சார்ந்த சிறந்த நிர்வாகி பொருள் வரும் பெயர் கொண்டவருக்கு போன் போட்டு, என்னப்பா இப்படி பண்றீங்க, உங்க முடிவை மாத்துங்கப்பா என பொதுச்செயலாளர் பேச, இல்லண்ணே! பசங்க எல்லாம் ரொம்பவே காட்டமாஆஆ இருக்காங்க, நீயூ காலேஜில வேற இப்ப ஏதோ கூட்டம் போடுறாங்களாம், இந்த முடிவை நம்ம மாற்றிக்கொண்டால் நாம் மாணவர் அணியை இழக்க வேண்டி வரும் என சொல்ல, அதிர்ந்து போன கழகத்தின் நிரந்தர தலைவரும், பொதுச்செயலாளரும், வழக்கறிஞர் அணியைத் தொடர்பு கொள்ள அங்கே கடைசிவரை தொடர்பு கிடைக்கவேயில்லையாம்.

ஒரு வகையாய் மறுநாள் காலை 10 மணிக்கே மாணவர் அணியும், வழக்கறிஞர் அணியும் தலைமைக்கு வந்து சேர அவர்களை மசூரா அறையில் அமரவைத்து விட்டு பல‌ மணி நேரங்களுக்குப்பிறகு அவர்களை சந்திக்க ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தார்களாம். மீண்டும் ஒருமுறை அவர்களிடம், அறிமுகமான முகமாக இருந்தால் நல்ல வாக்குகள் கிடைக்கும் அதனால் தான் கழகத்தின் நிரந்தர தலைவரும் பொதுச்செயலாளரும் போட்டியிட விரும்புகிறார்கள் என மமகவின் தலைவர் சால்ஜாப்பு சொல்ல, கடைசிவரை மறுத்தார்களாம் மாணவர் அணியும் வழக்கறிஞர் அணியும். நேரம் நீண்டு கொண்டே செல்ல இறுதியில் நாளை வாருங்கள் பேசிக்கொள்ளலாம், நாங்கள் அம்மாவிடம் சென்று அட்னன்ஸ் போட்டால் தான் எந்தெந்த தொகுதி கிடைக்கும் என்பது தெரியும் என கழகத்தின் நிதவும் நிபொவும் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல், இன்றைக்கே முடிவைச்சொல்லுங்கள் என அடம்பிடிக்க இவர்கள் செயலிழந்து தான் போனார்களாம்.

இறுதியில் இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு வரும் தேர்தலில்

3 சீட்டுக்களில் ஒன்றை ஏற்கனவே வர்த்தகர் அணிக்கு வழங்கிவிட்டதால், மீதமிருக்கும் இரண்டையும் மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் அணி என அணிக்கு ஒருவர் வீதம் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்களாம் சமாதானக்குழுவினர். மாணவர் அணியில் இடம்பெற்றிருக்கும் ததஜவின் தலைவர் பெயர் கொண்டவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும், வர்த்தகர் அணியில் மூடப்பட்ட பள்ளிவாசல் ஊர்க்காரரான டிராவல்ஸ்காரருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் செய்தி வருகிறது. டிராவல்ஸ்காரர் இப்போது ஆளுங்கட்சியில் இருந்தாலும் தங்கமுட்டையிடும் வாத்தான அவரை மீண்டும் உள்ளே இழுக்கவே இது செய்யப்படுகிறாம்.

இதைப்பற்றி நம்மிடம் சொல்லி பெருமையடித்த அந்த அப்பாவி மாணவரணிக்காரரிடம் நாம் சொல்லிய பதில் இதுதான்,

வர்த்தகர் அணிக்கு கொடுப்பது உண்மையாக இருக்கும். ஆனா நீங்க வேணுமினா பாருங்க, மிச்சம் ரெண்டுலயும் கழகத்தின் நி.தவும் நி.பொவும் மட்டும் தான் நிப்பாங்க,. பதவிவெறி அவர்களின் கண்களை மறைத்து விட்டது. அவர்கள் மட்டும் தான் எம்.பி ஆகனும், அவர்கள் மட்டும் தான் எம்எல்ஏ ஆகனும். அவர்கள் மட்டும் தான் வக்ஃப் வாரியத்துக்கு தலைவராகனும், அவர்கள் மட்டும் தான் சவூதி அரேபியாவுக்கு தூதர் ஆகனும். அதனால தான் நடந்து முடிந்த பொதுக்குழுவில் எவ்வித நிபந்தனையும் இன்றி இதே மாநில பொருப்பாளர்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டது. செயிச்சா எம்எல்ஏ, தோத்தா பழையபடி காலத்துக்கும் நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச்செயலாளர். ஏன் இவர்களைத்தவிர தமுமுகவில் வேறு யாருமே இல்லையா? அப்ப மிச்சம் மமகவிலும், தமுமுகவிலும் இருப்பவனெல்லாம் என்ன இழிச்சவாயனா? அவங்க சொன்னாங்களாம் இவங்க கேட்டாங்களாம். வர்த்தகர் அணிக்கு ஒன்னுங்கிறது உண்மையா இருக்கலாம்.மற்றபடி மாணவரணிக்கு ஒன்னு மருத்துவரணிக்கு ஒன்னு வழக்கறிஞர் அணிக்கு ஒன்னு, தொண்டரணிக்கு ஒன்னு, குண்டரணிக்கு ஒன்னுன்னு சொல்வதெல்லாம் சுத்த அல்வா!!! என சொன்னதும் அவர் முகம் வெளிறிப்போய் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தான் நேற்று மமகவுக்கு சேப்பாக்கம், ராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமுமுகவின் தலைமை அமைந்திருக்கும் தெருவில் நேற்று கசிந்த தகவல் படி சேப்பாக்கம் தொகுதியில் நிரந்தரப்பொதுச்செயலாளரும், ஆம்பூரில் கழகத்தின் நிரந்தரத்தலைவரும், இராமநாதபுரத்தில் மூடப்பட்ட பள்ளிவாசல் ஊரைச்சார்ந்த டிராவல்ஸ்காரரும் (அவர் ஆளும்கட்சியை விட்டு விலகி இவர்களிடம் இணைந்தால்), அல்லது அனார்கலியின் கணவர் பெயர் கொண்டவரும் போட்டியிட தீர்மானித்திருக்கிறார்களாம்.

யப்பா! தமுமுகவின் தங்கங்களே! உங்கள் கழகத்தின் நிரந்தர தலைவருக்கும், நிரந்தரப் பொதுச்செயலாளருக்கும் பதவிவெறி இல்லையென்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தீர்களே! இப்ப தெரிகிறதா உங்க கழகத்தின் நிரந்தரவான்களின் யோக்கியதை. அடச்சீ.....மானங்கெட்டவனுங்க

ஏன் இந்த அவசரம்? பேரம் படிந்து விட்டதோ?

அண்னன் ஜமாத்தில் பொதுக்குழுவிலும் தேர்தல் நிலைபாடு எடுக்கப்படவில்லை, அதேபோல செயற்குழுவிலும் தேர்தல் நிலைபாடு எடுக்கப்படவில்லை. ஏன் இன்னமும் பேரம் படியவில்லையோ? எனக் கேள்வி கேட்டிருக்கும் நம்மீது நம்மை விட அதிக அக்கறை கொண்டு பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு திரியும் அன்புக்கண்மணிகளுக்கு நாம் இங்கே விளக்கம் கொடுக்க வேண்டியது இருக்கிறது. அந்த வேலையற்ற வீணர்களுக்குத் தான் வேலையே இல்லை. என்னேரமும் ஓசி இன்டர்நெட்டில் உக்கார்ந்து கொண்டு வின்டிவியில் அடித்த காசை தலைவன் வாரி இறைக்க அதைப்பெற்றுக்கொண்டு வசைபாடுவதையே முழு நேரத்தொழிலாகக் கொண்டு திரியும் இவர்களுக்கு நாம் எக்ஸ்ட்ரா டைம் போட்டுத்தான் இதை சொல்லித்தொலைக்க வேண்டியிருகிறது.

பெட்டி,அல்லது 3 சீட்டு வேண்டும் என்று யாரிடமாவது ததஜ கேட்பதாக இருந்தால் பன்னீர் செல்வத்துக்கும், செங்கொட்டையனுக்கும் தூது மேல் தூது விட்டு , அண்ணே! நம்ம அப்பாயின்மெண்ட கொஞ்சம் அம்மாகிட்ட ஞாபகப்படுத்துங்க என சொல்லி சொல்லியே 3 மாசம் தவமாய்த் தவமிருந்து கடைசியில் பல்பொடி விளம்பரத்துக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை....

அல்லது ஒரு மேடை போட்டு ஒரு அமைப்பை மானங்கெட்டவர்களே! வெக்கங்கெட்டவர்களே! சமுதாயத்தை அடகுவைத்து 3 சீட்டு வாங்கியவர்களே! எங்களையும் கூட்டிக்கிட்டு போனா நாங்க என்ன ஒரு சீட்டா கேட்டுறுவோம்! நீங்க திருவல்லிக்கேணியில திமுக ஆட்களால குமுறக்குமுற அடிவாங்குன போது அதுக்கு சப்போர்ட் பண்ண நாங்க வேணும், ஆனா நாங்க நடத்துன உயர் நீதிமன்ற முற்றுகையில் கலந்து கொள்ள உங்கள் இயக்கத்தில் ஒரு பிரதிநிதி கூட இல்லையா?நீங்களெல்லாம் சமுதாய மானம் காப்பவர்களா என காய்ச்சி எடுத்து விட்டு கடைசியில் அவர்கள் உங்களை நல்லா "கவனிக்கிறோம்" என சொன்னதும் வாத்தியாரை உக்கார வச்சி போட்டோ எடுத்துக்கிட்டு, ஹிஹிஹிஹி நாங்க அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணந்தம்பிகதேன்.. என் அல்டாப்பு விடுவதாய் இருந்தாலும் பேரம் படிந்திருக்கும் என சொல்லலாமா.

ஆனால் சமுதாயத்திற்கு யார் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருகிறாரோ அவருக்குத்தான் வாக்கு என காலந்தாழ்த்தி கலந்தாலோசிப்பதன் பெயர் தான் உங்கள் பாணியில் ததஜ‌ மேல் சுமத்தப்படும் பேரத்தின் அர்த்தம். இப்ப நாங்க ஒன்னு கேக்குறோம்.

அது ஏனப்பா தெருவுக்கு ஒரு பேச்சு பேசிக்கிட்டு அலையிறீக! தம்புச்செட்டி தெருவுல கூட்டம் போடும் போது ஒரு பேச்சு, லிங்கிச்செட்டி தெருவில் ஒரு பேச்சு, அங்கப்ப நாயக்கன் தெருவில் ஒருபேச்சு என தெருவுகு ஒன்னா! ஜமாத்தில தான் கொள்கையும் இல்ல, பைலாவும் இல்ல. அட்லீஸ்ட் பேச்சிலையாவது சுத்தம் இருக்கனும்ல. மார்ச் 30 ஆம் தேதி தானப்பா பொதுக்குழுன்னு சொன்னீக, அப்றம் வாத்தியாரு சந்திச்சிட்டு போன பெறகு திடீர்னு ஏனப்பா மார்ச் 15 க்கு மாத்துனீக! உங்க பாசையில் சொல்லனும்னா பேரம் ‍படிஞ்சிருச்சோ! உங்களத்தான் யாருமே சீண்டலையே! வாத்தியாரு மாதிரி இத்துப்போன ஆளுக தான் நீங்க அவிகள என்னத்த திட்டினாலும் ஈன்னு பல்லக்காட்டிக்கிட்டே வந்து ஆதரவு கேப்பாக!

அதெல்லாம் சரி! பொதுக்குழு விசயத்துக்கு வரலாம். ஏன் திடீர்னு 15 நாள் முன்ன தள்ளுனீயன்னு நீங்க தான் சொல்லனும். தமிழகத்தில் ஒன்னு திமுக ஆட்சிக்கு வரும் இல்லாட்டி அதிமுக ஆட்சிக்கு வரும். அதனால தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் சமுதாயப்பணியாற்றி களைத்துப்போன சமுதாயத்தின் சிறந்த தலைவர் நீங்க இடஒதுக்கீடு கேட்டு அம்மாவுக்கும் மட்டும் கடிதம் எழுதியது என்ன காரணம்? கலைஞருக்கு ஏன் எழுதவில்லை? ஆக உங்கள் நிலைபாடு அன்றைக்கே உறுதியாகிவிட்ட நிலையில் பின்ன என்னத்துக்கு பொதுக்குழு?

சரி போனா போவுது. அதான் பேரம் படிஞ்சிருச்சில்ல. இருந்தாலும் பொதுக்குழுவில் என்ன மாதிரி தீர்மாணம் போடலாம் என்பதற்கு சில மாதிரிகள்

* நம் சமுதாயம் மானம் காக்கப் புறப்பட்டுப் போய் மானமிழந்து வெறும் 3சீட்டுக்கு பல்லைக்காட்டி பல்பொடி விளம்பரத்திற்கு போஸ் கொடுத்த கழகத்தின் நிரந்தரத் தலைவரை, பாஜக காரன் கூட சொல்லத்தயங்கும் மண்ணைக்கவ்வ வைப்போம் என்ற கோசத்தை வைத்த அண்ணன் ஜமாத்தை இந்தப் பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

* என்னதான் 3 சீட்டுக்கு மானமிழந்தாலும், நாம் மேடை போட்டு இவர்களை படுகேவலப்படுத்தினாலும் அதையெல்லாம் மறந்து எங்களை எப்படியாவது கரையேத்துங்க, நானும் பொதுச்செயலாளரும் ஜெயிச்சிட்டா போதும் என்ற ரீதியில் நம்மிடத்துக்கே நேரிலே வந்து குமுறிக்குமுறி அழுத வாத்தியார் மீது இர‌க்கம் காட்டும் விதமாக வருகின்ற தேர்தலில் அவர்களுக்காக சூறாவளி சுழல் பிரச்சாரம் செய்ய நமது பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது

* கள்ள பைலா வைத்து காலத்தை ஓட்டியதை கையும் களவுமாக கண்டுபிடித்த கூட்டத்தை நம் ஜமாத் கண்டிக்கிறது. அதே நேரம் நம் இயக்கத்துக்கு இன்று வரை ஒரு பைலா இல்லையே என்பதை கருத்தில் கொண்டு விரைவிலேயே 10 பேர் கொண்ட குழு அமைத்து ஒரு பைலாவை தயார் செய்து பைலா பற்றி கேட்டு தொந்தரவு செய்பவர்கள் முகத்தில் கரியை பூசுவது என இந்த பொதுக்குழு முடிவுசெய்கிறது

* கொஞ்சம் கூட சிந்தனை திறனும், அறிவும் இல்லாதவர்களெல்லாம் நம் ஜமாத்தின் முக்கிய பொருப்புகளில் வீற்றிருப்பதைக் கண்டு இந்த பொதுக்குழு கவலை கொள்கிறது. அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு அதற்கென தனி ஆசிரியரை இல்லை இல்லை நம் சகோதரர்கள் வேண்டுகோளுக்கிணங்க பெண் ஆசிரியையை நியமிக்க இந்த பொதுக்குழு பரிந்துரை செய்கிறது

* பைலா இல்லாத காரணத்தால் இப்போது இருக்கும் மாநில நிர்வாகிகளே காலத்துக்கும் நீடிப்பார்கள் என இப்பொதுக்குழு தீர்மாணிக்கிறது.

* குவைத் எண்ணெய் வயல் விவகாரத்தில் அண்ணன் ஜமாத் இவ்வளவு தெளிவாக பதில் கொடுத்தும் அதையெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இன்னும் பதில் தரவில்லை இன்னும் பதில் தரவில்லை என ஒரு முழு பைத்தியத்திற்கு ஈடாக கூக்குரலிட்டு நாம் சொல்வது தான் சரி என மக்களை நம்ப வைக்க விடிய விடிய தூக்கம் விட்டு யோசித்து ஏதாவது ஒன்றை உளறிவைத்து வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டு கதவிடுக்கில் மாட்டிய எலி போல தவிக்கும் அப்துல் முஹைமீனை இந்தப் பொதுக்குழு பாராட்டுகிறது. அவர் விரைவில் குணமடைய இந்த பொதுக்குழு பிரார்த்திக்கிறது