Tuesday, April 12, 2011

அரசியல் போதையில் அல்லாஹ் வை மறந்த ஜவாஹிருல்லாஹ்! – கூட்டனி கட்சி தலைவர்கள் முன்பு இன்ஷா அல்லாஹ் வார்தையை மென்டுமுழுங்கி பாதியாக்கிய அவலம்!

கோவை பொதுக்கூட்டத்தில் அதிமுக குண்டர்கள் வெறியாட்டம் – விளக்கு பிடித்து ஆள்காட்டிய மமக SDPI தொண்டர்கள்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹமத்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா, திமுக கூட்டணியை TNTJ ஆதரிப்பது ஏன் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 9.45 மணியளவில் திடீரென அந்தக் கூட்டத்திற்குள் உருட்டுக்கட்டைகள் மற்றும் கற்களுடன் புகுந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த பெரிய ஸ்பீக்கரை கூட்டத்தினர் மீது பிடித்து தள்ள கூட்டத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

என்னவென்று சுதாரிப்பதற்குள் SDPI வேட்பாளர் உமர் தலைமையில் அங்கு வந்த மமகவின் பொருப்பாளர்கள் அங்கிருந்த விளக்குகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நேரத்தில் அதிமுக குண்டர்கள் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் வயரைப் பிடுங்கி விட அந்த இடமே இருளில் மூழ்கியது.

மேடைக்கு முன்னாள் திரண்டிருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த கலவர சூழ்நிலையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பெண்களையும் குழண்ட்தைகளையும் சுற்றி அரணாக நிற்க அவர்கள் மீது பிளாஸ்டிக் சேர்களை தூக்கி அடித்து விட்டு பெண்கள் கூட்டத்திற்குள் நுழைந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த இஸ்லாமிய பெண்களை வெளியே சொல்ல முடியாத கொச்சை வார்த்தைகளால் திட்டி அவர்கள் மீதும் சேர்களைத் தூக்கி அடிக்க, பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர்.

ஆனால் மாற்றானின் இந்த வேலைகளையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாத மமக மற்றும் எஸ்டிபிஐ ரவுடிகள் அவனை அடி, இவனை அடி என ஒவ்வொருவர் மீதும் செல்போனின் விளக்கைப் பிடித்து காட்ட அவர்கள் காட்டிய ஒவ்வொருவர் மீதும் அதிமுக குண்டர்கள் வெறித்தனமான தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர்.

”மேடையில் உள்ளவன்களையும் அடியுங்கள்” என மமகவினருக்கு அதிமுக குண்டர்கள் உத்தரவிட அங்கே திரண்டிருந்த மமக SDPI ரவுடிகள் மேடையை நோக்கி சராமாரியாக கற்களை வீச ஆரம்பிக்க, மேடையின் மீது இருந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மாலை மலர் செய்தி




தமிழ் முரசு



ஆனால் என்ன நிகழ்ந்தாலும் மேடையை விட்டு இறங்க மாட்டோம் என உறுதியாக நின்ற நிர்வாகிகள் இரத்தம் சொட்ட சொட்ட மேடையிலேயே நின்றனர்.பெண்கள் அங்குமிங்கும் ஓடியதில் சில பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

ஆனால் பெண்களையும் குழந்தைகளையும் கூட பார்க்காமல் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அதிமுக குண்டகளின் செயலை, ஏவிவிட்ட நாய்களைப் போல அமைதிகாத்து தங்களின் எஜமான விசுவாசத்தைக் காட்டியது மமக.

தவ்ஹீத் ஜமாஅத்தின் திமுக ஆதரவு நிலையால் பெரும்பாண்மை முஸ்லீம்களின் வாக்கு திமுகவுக்கு மாறி திமுக கூட்டணி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருவதால் வெறுப்படைந்த அதிமுகவினர் இவர்களின் பிரச்சாரத்தை கெடுத்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்த வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளனர்.

ஆனால் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது மதப்பிரச்சனையாக மாறி விடும் என பயந்த அதிமுகவினர், அவர்களின் இன்றைய அடிமைகளான மம கட்சியை ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவழைத்து, முஸ்லிம்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற அதிமுகவின் திட்டத்தை சொல்லினர்.

எஜமானனின் திட்டத்தில் இஸ்லாமியனின் உயிர் போனாலும் பரவாயில்லை என்ற பாணியில் இதை ஏற்றுக்கொண்டு தங்களின் எஜமானிய விசுவாசத்தைக் காட்ட எத்தனித்த மம கட்சியினர் ஏற்கனவே தவ்ஹீத் ஜமாஅத் மீது வெறியில் இருந்த SDPI காரர்க்ளையும் இணைத்துக்கொள்ளலாம் என அவர்களின் யோசனையைச் சொல்ல இதை முழுமையாக ஒப்புக்கொண்ட அதிமுகவினர், அடுத்த கட்ட திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தார்கள்.

அதாவது பொதுக்கூட்டம் நடந்த சாரமேடு மெயின் ரோடு பகுதியில் இருந்த 6 க்கும் மேற்பட்ட சந்துகளில் அதிமுகவின் குண்டர்கள் குவிக்கப்பட்டனர்.

அவர்கள் ஏற்கனவே கடும் போதையில் இருந்ததால் அவர்களுக்கு கொலைவெறி இன்னும் அதிகமாகவே இருந்தது.

அதிமுகவினர் சந்துகளில் குவிக்கப்பட அதன் அடுத்த சாலையில் SDPI யும் மமகவினரும் தங்கள் வாகனங்களில் தயாராய் இருந்தார்கள்.

கூட்டம் முடியும் நேரத்தில் உள்ளே புகுந்து அதிமுக குண்டர்கள் முதல் தாக்குதல் நடத்த துவங்க, பின்னர் செல்போன் லைட்டின் உதவியால் ஒவ்வொரு கிளை நிர்வாகியாக அடையாளம் காட்டப்பட்டு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

அத்தோடு மேடையை நோக்கி குண்டர்கள் வீசிய கற்கள் மேடைக்கு முன்னாள் கூடியிருந்த பெண்களின் பகுதியில் வந்து விழுந்தன. ஆனால் நல்லவேளையாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் வல்ல இறைவன் காத்துவிட்டான். முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதல்களை விளக்கு பிடித்து ஆள்காட்டி முன்னின்று நடத்திய மமகவோ, SDPI யோ அங்கே பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை.

இவர்கள் கூட்டங்களுக்கு இனி பெண்கள் வரக்கூடாது என்பதற்காகவே மாற்றார்கள் நடத்திய வெறியாட்டத்தை கொஞ்சமும் தடுக்காமல் தன் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தியது மமக.

காவல்துறைக்கு புகார் அளித்தும் உடனடியாக யாருமே வராததாலும், நம் ஜமாஅத்தின் உறுப்பினர்கள், பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற என்னத்தில் அமைதி காத்ததாலும் அதிமுக,மமக, SDPI யின் வன்முறை வெறியாட்டம் இரவு 11 மணி வரை நீடித்தது.

இரவு 11 மணிக்கு மேல் தன் படையினருடன் வந்த கமிஷ்னர் சைலேந்திர பாபுவிடம் 25 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

அதிலே 11 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து நம் மக்கள் கலைந்து சென்றனர்.

கோவையில் அதிமுக தனியாக போட்டியிடுகிறது. அவர்களுக்கு மமக ஆதரவு அளிக்கிறது. அவர்களை எதிர்த்து எஸ்டிபிஐ போட்டியிடுகிறது. ஆனால் இவர்களின் எதிர்ப்பையெல்லாம் மறந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தாக்க வேண்டும் என்ற விசயத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

அதிமுக பாஜகவின் ஊதுகுழல் என்று சொல்லி வந்த மமக இன்றைக்கு ஏகத்துவததை அழிக்க அதிமுகவோடும், எஸ்டிபியுடனும் கூட்டணி சேர்ந்திருக்கின்றனர்.

நம் சமுதாய ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு விளக்கு பிடித்து வழிகாட்டிய இந்த மமகவினரா நம் சமுதாய நலனை காக்கப் போகிறார்கள். சிந்தியுங்கள் இஸ்லாமிய சமுகமே! இவர்களை முழுமையாக புறக்கணித்து இவர்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

பா.ஜ.கவின் பினாமி தான் ஜெயலலிதா - தமுமுக தலைவர் டெஹல்காவுக்கு அளித்த பேட்டி

தமுமுக கிளைகள் கலைக்கப் படுகின்றன. 2








ஏகனின் திருப்பெயரால்...


எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன, எத்தனையோ அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கென்று ஒரு அமைப்பு இல்லை. முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கேட்பாரின்றி வேதனைப்படுகிறார்கள். ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் நாம் ஒன்றிணைய வேண்டும், அதற்கு என்னவழி என யோசித்த தமுமுகவின் முன்னாள் நிர்வாகிகள், குணங்குடி ஹனீஃபா வைத்திருந்த 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்' எனும் பெயரை தூசி தட்டி எடுத்து அதை வீரியப்படுத்தி முஸ்லிம்களை ஒன்றிணைத்தனர். அதன் காரணமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறையத் தொடங்கின.


அதன் அமைப்பு நிர்ணய சட்டம்(பைலா)வில் பிரிவு(எ) ஆகிய 'கழகம் அரசியல் கட்சி சார்பற்றதாகவே செயல்படும். எந்த காலத்திலும் நாடாளுமன்ற, சட்டமன்ற, நகராட்சி, ஊராட்சி ஆகிய தேர்தல்களில் போட்டியிடாது' என்ற விதியின் படி பணிகளை செய்து கொண்டிருந்தது.




அதனுடைய பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் நாங்கள் பதவி ஆசைக்காகவோ, பணத்திற்காகவோ இந்த அமைப்பை நடத்தவில்லை, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் ஒருபோதும் தேர்தலில் நிற்கமாட்டோம்' என்று அனைத்து மேடைகளிலும் முழங்கினர்.




மக்களும் அதை நம்பி அணி திரண்டனர். நாளடைவில் அதன் தற்போதைய நிர்வாகிகளுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டபோது இந்த அமைப்பை கட்டிக்காத்த பீ.ஜே, பாக்கர் உட்பட பலரை வெளியேற்ற திட்டமிட்டு தவ்ஹீத் பிரச்சாரத்தால் கப்ரு வணங்கிகள், தரீக்காவாதிகள், ஓதி பார்த்து பிழைப்பு நடத்தும் முஸ்லிம் பூசாரிகள், மரம், மட்டையை வணங்கும் முஸ்லிம்கள்(?!) எல்லோரும் தமுமுகவில் இணைய மறுக்கின்றனர் என்று கூறி தவ்ஹீத்வாதிகளை வெளியேற்றிவிட்டு தமுமுக எனும் இயக்கத்தை தற்போதைய நிர்வாகிகள் அபகரித்தனர். இவ்வாறு தவ்ஹீத்வாதிகளால் உருவாக்கப்பட்ட இயக்கத்தையும் இடத்தையும் அபகரித்துவிட்டு அதிலிருந்து தவ்ஹீத்வாதிகள் துரத்தப்பட்டனர். ஒருங்கிணைக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை குரங்குகளின் கையில் அகப்பட்ட பூமாலை போலானது.
அந்த சூழ்நிலையில் கூட இவர்கள் அரசியல் ஆசையை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.


2005 ஜூன் மாதத்தில் மக்கள் உரிமையில் வந்த ஒரு கேள்வி பதிலை பாருங்கள்.


உமர் அலி, மஞ்சக்கொல்லை


?தமுமுக, முஸ்லீம் லீக், தேசிய லீக் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு கூட்டணியில் இணைந்து அதிக இடங்களை பெற்று தேர்தலை சந்தித்தால் என்ன?!


முஸ்லிம் லீகும் தேசிய லீகும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள். தமுமுக தேர்தலில் போட்டியிடாத சமுதாய இயக்கம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.அந்த இரு லீக்குகளும் குறைந்த பட்சம் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக செயல்பட முன்வந்தால், அவர்கள் இருவரையும் தமுமுக வழிநடத்தி அதிகமான தொகுதிகளை அக்கட்சிகளுக்கு பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யும்.இதனால் நமது வாக்குகள் சிதறாத நிலை ஏற்படும். அதிகமான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களாக உருவாகும் சூழலும் ஏற்படும். இதை இரண்டு லீக்குகளும் பரந்த மனதோடு சிந்திக்க வேண்டும்.
மக்கள் உரிமை மே 27 – ஜூன் 02, 2005 பக்கம் 14


அது மட்டுமின்றி 2006 –ல் கோவையில் நடந்த செயற்குழுவில் தமுமுக தேர்தலில் போட்டியிடாது என்று தீர்மானமாகவும் கொண்டுவந்தார்கள்.
பார்க்க மக்கள் உரிமை செப்டம்பர் 22 – 28, 2006 பக்கம் 1,2,14



அமைப்பின் கட்டுக்கோப்பை மீறினால் எதிர்காலத்தில் தமுமுக நிர்வாகியாகும் வாய்ப்பை இழந்து விட நேரிடும் என அறிவிப்பு செய்கிறார் ஹைதர் அலி.

இது அவருக்கு பொருந்தாதோ?

அதற்கு அடுத்த மாதம் தமுமுகவின் விதியை மீறி தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கடலாடி ஒன்றிய செயலாளர் பாஹிர் அலியை பொறுப்பில் இருந்து நீக்கி சிக்கல் நகர நிர்வாகத்தையும் கலைத்தது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், சோதுகுடி கிளை தலைவரான அஹமது ஜலால் மற்றும் கீழாயூர் கிளை நிர்வாகி கனி ஆகியோரையும் பதவியிலிருந்து நீக்கியது.



இவ்வாறு செய்தவர்கள் திடீரென தங்களுடைய அரசியல் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தனர். அன்று அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் தேர்தலில் ஒரு போதும் போட்டியிட மாட்டோம்' என்றவர்கள் அதற்காக திட்டமிட ஆரம்பித்தனர். பின்னர் திமுகவிற்கு ஆதரவளித்து திமுகவால் முஸ்லிம் சமுதாயம் பாதிக்கப்பட்ட போது கூட சமுதாயத்தின் முதுகில் குத்தி திமுகவிற்கு வெண்சாமரம் வீசி, அதனால் வக்பு வாரியம் கிடைக்கப்பெற்று அதில் சுகம் கண்ட இவர்கள் பதவிகளுக்காக பறக்க ஆரம்பித்தனர்.


முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அனைத்து சமுதாயத்தவருக்கும் எனில் ஏற்கனவே பல கட்சிகளும் பல அமைப்புகளும் இருக்கின்றன. அனைவருக்காகவும் ஒரு அமைப்பு எனில் ஒரு முஸ்லிம் கூட இந்த அமைப்பில் இணைந்திருக்கமாட்டான். முஸ்லிம்களை வைத்து உயர்ந்து விட்டு இன்று அந்த முஸ்லிம்களையே எட்டி உதைக்கின்றனர். முஸ்லிம்களை மட்டும் வைத்திருப்பதால் நாம் பதவிக்கு வரமுடியாது என நினைத்த இவர்கள் மற்றவர்களையும் இணைக்க துவங்கினர். எனவே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு 'மக்கள் முன்னேற்ற கழகம்' என பெயர் சூட்டினர். அதுவும் பெயர் மாறி 'மனித நேய மக்கள் கட்சி' என்று தற்போது உலா வருகிறது.


அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மீறியவர்கள் எதற்கும் துணிவார்கள். அரசியல் லாபத்திற்காக சமுதாயத்தை விற்றவர்கள் இன்று திமுக, அதிமுக, சரத்குமாரின் சமுக, பாஜக என தாவித்தாவி சென்றபோதும் அனைவராலும் துரத்தி அடிக்கப்பட்டு வேறு வழியின்றி தனித்து நிற்கும் நிர்கதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேரத்திற்கொரு வாக்கு, நாளுக்கொரு பேச்சு பேசும் இவர்களைவிட பிற அரசியல் கட்சிகள் மேல் என தமுமுகவின் நிர்வாகிகள் கூண்டோடு விலகி வருகின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை தலைவரான அன்வர் பாட்ஷா மற்றும் கரீம், உசேன், ஷபீ, சாவேஸ் உட்பட பலர் தமுமுகவிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து யூனுஸ்கானுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர்.


பார்க்க படம் :


இது தொடக்கம் மட்டுமே!

அரசியலும் இஸ்லாமிய இயக்கங்களும்






ஏகனின் திருப்பெயரால்...


ஜாக் : தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், அடிக்கடி ஒற்றுமை பிரசுரம் வெளியிடுவார்கள். இவர்களைவிட்டு பிரிந்த அனைவரும் பாவிகள் என்று ஃபத்வா கொடுத்தார்கள். ஜாக் அமைப்பை சாராதவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று நோட்டீஸ் அடித்தார்கள். (தேவைப்படுவோருக்கு ஆதாரம் தரப்படும்.) நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இந்த காலத்திற்கு பொருந்தாது என்று பொதுமேடையில் பகிரங்கமாகவே சொன்னார்கள், சொல்கிறார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவதாகவும் சொல்வார்கள். ததஜவினர் சந்தணத்தை பூசிக்கொண்டால், அவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சாக்கடையை தங்கள் மேல் பூசிக்கொள்வார்கள்.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸை ஆதரித்து 15-04-200 6 15-04-2006 அன்று ஜாக்கின் மாநில செயலாளர் மற்றும் பிரச்சார பீரங்கியான கோவை அய்யூப் கடையநல்லுரில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார்.




ஏப்ரல் மாதத்தில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ததஜ அதிமுகவை ஆதரித்ததால் மே மாதம் அந்தர்பலடி அடிக்கிறார் கமாலுதீன்.


'நம்முடைய பேச்சு, உயிர் மூச்சு தவ்ஹீத்! தவ்ஹீத். தவ்ஹீத் தவிர வேறல்ல. அரசியல்வாதிகளுக்கு ஆள்பிடிக்கும் மாயாஜாலப்பேச்சு, அது எவர் வாயிலிருந்து வந்தாலும் அவரை இனம் காண்போம், தனிமை படுத்துவோம். இணைவைக்கும் அரசியல்வாதிகளுக்காக எந்த ஏகத்துவவாதியையும் நாம் இழந்துவிடக் கூடாது'. – அல்ஜன்னத், மே-2006 20பக்கம் 20 என்று எழுதுகிறார்கள்.

பீ.ஜே யை திட்டுகிறோம் என நினைத்துக் கொண்டு சாக்கடை குளியல் நடத்தினார்கள்.

தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் எங்கே நம்மை கொண்டு போய் தள்ளப் போகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். அல்ஜன்னத், மே 2006, பக்கம் 48


நம்மை பொறுத்தவரை அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட அனைவரும் சமமே. அது மூன்றெழுத்து அரசியல்வாதியாயினும் சரிதான். நான்கெழுத்து அரசியல்வாதி யாயினும் சரிதான். அல் ஜன்னத் மே 2006 2006 பக்கம் 50

ஆனால் ஏகத்துவவாதிகளோ(?) இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்று துடிக்கிறார்கள்.

பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி

சே! சாக்கடை நாறுகிறது! - அல் ஜன்னத் மே 2006 பக்கம் 51



இவ்வாறு எழுதியவர்கள் பித்னாவில் ஆஸ்கார் விருதுபெற்ற பஸிலுல் இலாஹியை வேட்பாளராக நியமிக்கவேண்டுமென்று கோரி நடுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பார்க்க படம்


அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் ஜாக்கின் துணை செயலாளரான ஏர்வாடி சிராஜ் தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்று இன்றும் உள்ளாட்சி பதவியில் இருக்கிறார்.

இவ்வாறு நயவஞ்சக வேடமிடும் இந்த போலிதவ்ஹீத்வாதிகளை நாம் சட்டைசெய்ய வேண்டியதில்லை.


மனித நீதி பாசறை :


ஆர்ப்பாட்டம் கூடாது, போராட்டம் கூடாது, கொடி கூடாது, ஜனநாயகம் கூடாது, அபுஜஹல் தாக்க வந்த போது நபி(ஸல்)அவர்கள் கொடிபிடித்துக் கொண்டா இருந்தார்கள் என்றெல்லாம் மற்றவர்களை நக்கலடித்தவர்கள் இன்று கொடி, ஆர்ப்பாட்டம் என்று தங்களை மாற்றி 'அதிகாரம் மக்களுக்கே' எனும் கோஷத்துடன் வாக்களிக்கவும் இரவல் கட்சிக்காக பிரச்சாரம் செய்யவும் தயாராகிவிட்டார்கள். விடியல், மனித நீதி பாசறை, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என பல பெயர்களில் இவர்கள் உலா வந்தாலும் இவர்களால் முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைக்கப்படவில்லை. எனவே இதையும் விட்டுவிடுவோம்.

ஜமாஅத்தே இஸ்லாமி : எம்.என்.பி யின் கொள்கையில் முக்கால் பாகத்தைக் கொண்டிருக்கும் இவர்களும் பிற மாநிலங்களில் கொடிபிடித்து அரசியல் அதிகாரத்திலும் ஈடுபடுகிறார்கள். ஒயிட் காலர் மற்றும் வி.ஐ.பிக்களுக்கு மட்டும் என தேர்ந்தெடுத்து அழைப்புபணி செய்வதால் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இவர்களால் சமுதாயத்திற்கு சாதக பாதகம் எதுவுமில்லை.

முஸ்லிம் லீக் :

அரசியலில் தனித்தன்மை இல்லாததால் இருப்பவனையும் இறந்தவனையும் வணங்கிக்கொண்டு மிகப்பெரிய இணைவைப்பை செய்து கொண்டிருக்கின்றனர். பதவிக்காக செயல்படும் இந்த பெயர்தாங்கி முஸ்லிம்களால் சமுதாயத்துக்கு எந்த நன்னையும் இல்லை.
பார்க்க : படம்

ஆனால் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் இரு இயக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்விரு இயக்கங்களும் சமுதாயத்திற்கு செய்த, செய்கின்ற நன்மைகள் என்ன? சமுதாயத்தின் பெயரைக்கூறி சமுதாய மக்களை எவ்வாறு வஞ்சித்தன, துரோகம் செய்தன என்பதை நாம் அடுத்ததாக காண்போம்.

Monday, March 28, 2011

இந்து முஸ்லிம் கலவரத்திற்கு வித்திட்ட எஸ்.டி.பி.ஐ


இந்து முஸ்லிம் கலவரத்திற்கு வித்திட்ட எஸ்.டி.பி.ஐ
இரவு நேரத்தில் ஒளிந்திருந்து தாக்குவது, மறைந்திருந்து தாக்குவது, பத்து பேர் சேர்ந்து தனிநபரை தாக்குவது போன்ற கீழ்த்தரமான செயல்களை செய்வதில் வல்லவர்களான எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினர் மதுரையில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்குள் கன்றுக்குட்டி தலையை வீசியுள்ளனர். இதனால் இந்து முஸ்லிம்களுக்குள் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. காவல்துறை உடனடியாக அதை வீசிய எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினரை கைது செய்ததால் மிகப்பெரிய கலவரம் தவிர்க்கப்பட்டது. இவர்களுக்கு துணிவிருந்தால் நாங்கள் தான் வீசினோம் என்று கூறியிருக்க வேண்டும். ஆனால் ஓடி ஒளிந்து கொண்டனர். இருட்டிலும் மறைந்திருந்தும் இந்த கோழைகள் பிறரை தாக்குவதால் முஸ்லிம் சமுதாயத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகின்றது. இவர்கள் ஒருவரை தாக்க அவர்களோ முஸ்லிம்கள் பத்து பேரை தாக்குகின்றனர். எனவே இந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினர் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களை எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினர் யார் செய்தாலும் உடனடியாக அவர்களை அடையாளம் காட்டி காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்படும். முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.aa

Wednesday, March 23, 2011

சாயம் வெளுக்கும் மமக‌















கொஞ்சம் கொஞ்சமாய் வெளுக்க ஆரம்பித்து விட்டது மமகவின் சாயம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக‌ அரசியலில் இறங்கமாட்டோம் என தமுமுக வழி களம் கண்டவர்கள் இன்றைக்கு சைத்தானின் ஆசையில் மதிமயங்கி எப்படியாவது ஒரு பதவியைப் பிடித்து விடவேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் பூசியிருந்த இஸ்லாமிய சாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே எஸ்டிபிஐ அமைப்பு தங்களுக்கு கொள்கை குத்துப்பாடல்களை அமைத்து பீப்பி ஊதி ஊர்வலம் வருவதைப் போல இவர்களும் தங்களுக்கென ஒரு கொள்கைப்பாடல்களை வடிவமைத்து கொஞ்சமாக தங்களின் முகத்திரையை விளக்கினார்கள்.
கலைஞரிடம் 2 சீட்டு வாங்குவதற்காக அவருக்கு நன்றி அறிவிப்பு என்ற பெயரில் பாராட்டு விழா நடத்தி அவருக்கு சோப்பு போட்டு வக்ஃப் வாரியத்தையும் வளைத்துக்கொண்டு அம்மா தான் இஸ்லாமியர்களின் துரோகி, மோடியின் தோழி என பேட்டி கொடுத்து வந்தவர்கள் கடைசியாக 2 சீட்டு கொடுக்காமல் கலைஞரால் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளப்பட்டு நிர்கதியாக நின்ற போது தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம் கலைஞரின் இஸ்லாமிய துரோகங்கள்.

பின்னர் அம்மா செய்த துரோகங்கள் எல்லாம் மறந்து போய் இன்றைக்கு அன்புச்சகோதரி ஆகிவிட்டார் அம்மா. அன்றைக்கு சமுதாயக் காவலராக இருந்த கலைஞர் இன்றைக்கு சமுதாய துரோகி ஆகிவிட்டார். கலைஞர் தான் கைது செய்தார், கலைஞரின் துரோக வரலாறு என ஏகப்பட்ட செய்திகளை தங்களின் அதிகாரப்பூர்வ தளத்திலும், பத்திரிகையிலும் இப்போது போட்டு கிழிகிழி என கிழிக்கிறார்கள். கலைஞர் செய்ததாக இவர்கள் சொல்லும் துரோகம் அனைத்தும் இவர்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி பாராட்டு விழா நடத்தி பல்லைக்காட்டியதற்கு முன்பே, கலைஞர் தான் சமுதாயக் காவலர் என ஊர் ஊராய் போஸ்டர் ஒட்டி பேனர் வைப்பதற்கு முன்பே நடந்த நிகழ்ச்சிகள் தானே! அதெல்லாம் அப்போது எப்படி மறந்து போனது? இரண்டு சீட்டு தரவில்லை என்றதும் இஸ்லாமிய இன காவலர் என உங்களால் அடையாளம் காணப்பட்ட கலைஞர் இப்போது துரோகியாகிவிட்டார். துரோகியாகக் காட்டப்பட்ட அம்மா இன்றைக்கு அன்புச்சகோதரி ஆகிவிட்டார்.

இப்படியே இவர்களின் பச்சை அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து இன்றைக்கு முழுமையான அரசியல்வாதிகளாக ஆகிவிட்டார்கள். இவர்கள் தேர்தல் செலவுகளைச் செய்வதற்கு அப்பாவி மக்களிடம் கட்டாய வசூல் செய்ய உத்தரவிட்ட இந்த கட்டப்பஞ்சாயத்துக் கழகம் இப்போது நிர்ணயித்து இருக்கும் தொகை ஒரு கிளைக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய். இதை கழகத்தின் நிரந்தரத்தலைவரே நிதி தாரீர் என்ற பெயரில் அவரின் கழக அப்பாவித்தொண்டர்களுக்கு பகிரங்கமாக தெரிவித்து விட்டார். பாவம் இவர்கள்! பத்தாயிரத்துக்கு குறையாமல் நிதி சேகரிக்க சாதாரண கிராமப்புற கிளைகள் என்ன செய்வார்கள்?.

Monday, March 21, 2011

மமகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ஒரு சிறப்பு பார்வை





வரக்கூடிய தேர்தலில் மமகவின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் ஒரு கலந்தாய்வுக்கூட்டம் தமுமுகவின் மாநிலத் தலைமையில் நடந்தது. இந்தகூட்டத்தில் தமுமுக மற்றும் மமகவின் முக்கியப்பொருப்பாளர்கள் மற்றும் அணியினர் கலந்து கொண்டார்களாம். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமுமுக மற்றும் மமகவின் செயல்பாடுகள் வரும் தேர்தலில் எப்படி இருக்க வேண்டும் என்ற ரீதியில் கலந்துரையாடல் நடந்திருக்கிறது.

இந்தக்கலந்துரையாடலின் போது வரும் தேர்தலில் கழகத்தின் நிரந்தரத் தலைவரையும், நிரந்தர பொதுச்செயலாளரையும் எப்படியாவது எம்எல்ஏ ஆக்கிவிடவேண்டும் என்பதற்காக இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு அஇஅதிமுக கூட்டணிக்கு 234 தொகுதிகளிலும் கடுமையாக பாடுபட்டு உழைப்பது என்ற ரீதியில் முடிவுகள் எடுக்கப்பட்டதாம்.(பாவம்! இஸ்லாமிய சமுதாயம் 3 வாங்கிக்கொண்டு 300க்கு உழைக்கும் என்ற கேவல நிலையை உருவாக்கி விட்டார்கள் இந்த மமவினர்)

மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் கலந்து கொண்டவர்களின் வாதங்கள் மிகக் கடுமையாக இருந்ததாம். அதாவது நீங்கள் வெறும் 3 சீட்டுக்களை வாங்கிக்கொண்டு நம் சமுதாயத்திற்கே பெரிய தலைகுணிவை ஏற்படுத்தி விட்டீர்களே என்ற ரீதியில் கருத்துக்களை வெளிப்படுத்தினார்களாம்.(பரவாயில்லை தமுமுக தொண்டர்கள் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்) ஆனால் தமுமுகவின் நிரந்தரத் தலைவரும் நிரந்தரப் பொதுச்செயலாளரும் ரோஸ்டர் முறையை எப்படி நியாயப்படுத்தினார்களோ அதே போல சொந்தச்சின்னம் என்ற கருத்தை முன்வைத்து அவர்களைக் கூல் படுத்தினார்களாம்., இதை ஒப்புக்கொண்ட மாணவர் அணியினரும் வழக்கறிஞர் அணியினரும் தமுமுகவின் வெப்சைட்டில் கழகம் 3 சீட்டுக்கள் பெற்றதற்கு ஆதரவாக வந்த வெறும் 7 கருத்துகளை மட்டுமே தான் வெளியிட்டீர்கள், ஆனால் நீங்கள் 3 சீட்டு வாங்கியதற்கு எதிராக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருத்துக்களை ஏன் வெளியிடவில்லை எனக் கேட்டார்களாம். இந்த இடத்தில் விழி பிதுங்கி தலைவரும், பொதுச்செயலாளரும் விழிக்க , நிலைமையை உணர்ந்த தமீம் அன்சாரி ஒருவகையாய் சமாளித்தாராம்.

அதாவது எதிரிகள் (வேற யாரு?) கூட தவறான கருத்துக்களைப் பதிவுசெய்யலாம், பதிவும் செய்கிறார்கள்.,ஆகவே இதை நாங்கள் முறைப்படுத்தினோம் என்றார்களாம். உடனே பதில் தாக்குதல் நடத்திய மாணவர் அணியினர், நம் வெப்சைட்டில் இருக்கும் ஒவ்வொரு செய்திக்கும் எவ்வித கருத்துக்களையும் நீங்கள் வெளியிடுவதில்லை, இதைப்பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நீங்கள் ஏன் அறியவில்லை எனக் கேட்டார்களாம். அதையும் பூசி மெழுகிய அன்சாரி, உங்கள் தொகுதியில் வசூல் நிலவரம் எப்படி என்பதை கேட்க, இடைமறித்த மாணவர் அணியினர் எங்களுக்கு தேர்தல் குறித்து இன்னமும் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார்களாம். அனுமதி வழங்கப்பட்டவுடன் அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாம் கழகக்குழு.


அதாவது வரும் தேர்தலில் மாணவர் அணி சார்பில் ஒருவரும், வழக்கறிஞர் அணி சார்பில் ஒருவரும் போட்டியிட வேண்டும் என தெரிவித்தார்களாம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாமா குழுவினர் ஒரு ரகசிய செய்தியைப் போட்டு உடைத்தார்களாம். அதாவது சென்ற முறை வர்த்தகர் அணியில் தங்க முட்டையிடும் வாத்தாய் இருந்த பள்ளிவாசல் மூடிய ஊர்காரரை கழகம் கண்டுகொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் தான் ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டார். அவரைப் போல இனி யாரும் கழகத்தைவிட்டு கழன்று விடக்கூடாது என்பதற்காக இம்முறை வர்த்தகர் அணிக்கு ஒரு சீட்டு ஒதுக்குவது என கழகம் முடிவெடுத்திருக்கிறது.


எனவே மிச்சமிருப்பது இரண்டு சீட்டு தான் (ஒன்னு உனக்க்க்க்கு, இன்னொன்னு எனக்க்க்க்கு). எனவே இனி வேறு நபர்களுக்கு ஒதுக்குவது சிரமம் என நிரந்தர தலைவர் விளக்க, தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்த மாணவர் அணியினர் முடியவே முடியாது என சொல்லியிருக்கின்றனர். அத்தோடு பேசிய அவர்கள் நீங்களும், பொதுச்செயலாளரும் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டுயிட்டு விட்டீர்கள். எனவே நீங்கள் திரும்ப சட்டமன்றத்திற்கு போட்டியிடுவது தகுதி குறைவாக இருக்கும். அத்தோடு கழகத்திற்கு வரும் பதவிகளை எல்லாம் நீங்கள் மட்டுமே அனுபவிக்கிறீர்கள், இதனால் தான் உங்களை எதிரிகள் பதவி வெறி பிடித்தவர்கள் என தூற்றுகிறார்கள். அதுமட்டுமின்றி ஐநா சபையிலேயே ஆங்கில புலமையாற்றிய நீங்கள் தான் நாடாளுமன்றம் போக மிகத்தகுதியான நபர் (கழகத்தின் நிரந்தரத் தலைவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அதாவது நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு முன்னதாக ஊருக்கு ஊர் சென்று மீட்டிங் போட்டார். அதிலே அவர் பேசிய பேச்சுக்கள், " " நாடாளுமன்றத்திற்குச் சென்று நம்முடைய குறைகளை ”Mr.Prime Minister, What about our Reservation?”“ என்று ஆங்கிலத்திலே கேட்பதற்கு ஆள் இல்லையே! என்று சொன்னாரு.

அப்ப நாம நெனச்சோம், சே! தலைவர் இன்னாமா பீல் பண்ணி கூவுறாருன்னு, அப்பறம் தான தெரிஞ்சது ,அந்த இங்கிலிபீசு பேசுற ஆளுன்னு அவரத்தான் சொன்னாருன்னு) எனவே நீங்கள் தான் நாடாளுமன்றம் செல்லத் தகுதியான நபர். அதுமட்டுமின்றி உங்கள் மற்றும் பொதுச்செயலாளரின் வழிகாட்டுதல் கழகத்திற்கு அவசியம் தேவை. எனவே நீங்கள் வெளியே இருந்து வழிகாட்டினால் தான் எங்களைப் போன்ற இளைஞர்கள் நாளை இந்தக் கழகத்தைக் கட்டிக்காகக் இயலும் எனவும் வலியுறுத்தினார்களாம். இதைக்கேட்டு நிரந்தர தலைவரும், பொதுச்செயலாளரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே அமைதி காக்க ஆடிப்போனதாம் கழகத்தின் சபை.


நீண்ட நேர மௌணத்திற்கு பிறகு இதைப்பற்றி இஷா தொழுகைக்குப் பின் முடிவெடுக்கலாம் என்ற ரீதியில் பெருந்தலைகள் இழுத்துவிட, மாணவர் அணியும், வழக்கறிஞர் அணியும் இஷா தொழுகை வரை காத்திருந்ததாம். ஆனால் இஷா முடிந்தும் ஒரு முடிவை அறிவிக்காமல் காலம் கடந்து செல்லவே கடைசியில் நாளை முடிவு சொல்கிறோம் என கழகத்தினர் இவர்களை அனுப்பிவைத்தார்களாம். இதற்கிடையில் இரவோடு இரவாக மாணவர் அணியைச் சார்ந்த சிறந்த நிர்வாகி பொருள் வரும் பெயர் கொண்டவருக்கு போன் போட்டு, என்னப்பா இப்படி பண்றீங்க, உங்க முடிவை மாத்துங்கப்பா என பொதுச்செயலாளர் பேச, இல்லண்ணே! பசங்க எல்லாம் ரொம்பவே காட்டமாஆஆ இருக்காங்க, நீயூ காலேஜில வேற இப்ப ஏதோ கூட்டம் போடுறாங்களாம், இந்த முடிவை நம்ம மாற்றிக்கொண்டால் நாம் மாணவர் அணியை இழக்க வேண்டி வரும் என சொல்ல, அதிர்ந்து போன கழகத்தின் நிரந்தர தலைவரும், பொதுச்செயலாளரும், வழக்கறிஞர் அணியைத் தொடர்பு கொள்ள அங்கே கடைசிவரை தொடர்பு கிடைக்கவேயில்லையாம்.

ஒரு வகையாய் மறுநாள் காலை 10 மணிக்கே மாணவர் அணியும், வழக்கறிஞர் அணியும் தலைமைக்கு வந்து சேர அவர்களை மசூரா அறையில் அமரவைத்து விட்டு பல‌ மணி நேரங்களுக்குப்பிறகு அவர்களை சந்திக்க ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தார்களாம். மீண்டும் ஒருமுறை அவர்களிடம், அறிமுகமான முகமாக இருந்தால் நல்ல வாக்குகள் கிடைக்கும் அதனால் தான் கழகத்தின் நிரந்தர தலைவரும் பொதுச்செயலாளரும் போட்டியிட விரும்புகிறார்கள் என மமகவின் தலைவர் சால்ஜாப்பு சொல்ல, கடைசிவரை மறுத்தார்களாம் மாணவர் அணியும் வழக்கறிஞர் அணியும். நேரம் நீண்டு கொண்டே செல்ல இறுதியில் நாளை வாருங்கள் பேசிக்கொள்ளலாம், நாங்கள் அம்மாவிடம் சென்று அட்னன்ஸ் போட்டால் தான் எந்தெந்த தொகுதி கிடைக்கும் என்பது தெரியும் என கழகத்தின் நிதவும் நிபொவும் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல், இன்றைக்கே முடிவைச்சொல்லுங்கள் என அடம்பிடிக்க இவர்கள் செயலிழந்து தான் போனார்களாம்.

இறுதியில் இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு வரும் தேர்தலில்

3 சீட்டுக்களில் ஒன்றை ஏற்கனவே வர்த்தகர் அணிக்கு வழங்கிவிட்டதால், மீதமிருக்கும் இரண்டையும் மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் அணி என அணிக்கு ஒருவர் வீதம் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்களாம் சமாதானக்குழுவினர். மாணவர் அணியில் இடம்பெற்றிருக்கும் ததஜவின் தலைவர் பெயர் கொண்டவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும், வர்த்தகர் அணியில் மூடப்பட்ட பள்ளிவாசல் ஊர்க்காரரான டிராவல்ஸ்காரருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் செய்தி வருகிறது. டிராவல்ஸ்காரர் இப்போது ஆளுங்கட்சியில் இருந்தாலும் தங்கமுட்டையிடும் வாத்தான அவரை மீண்டும் உள்ளே இழுக்கவே இது செய்யப்படுகிறாம்.

இதைப்பற்றி நம்மிடம் சொல்லி பெருமையடித்த அந்த அப்பாவி மாணவரணிக்காரரிடம் நாம் சொல்லிய பதில் இதுதான்,

வர்த்தகர் அணிக்கு கொடுப்பது உண்மையாக இருக்கும். ஆனா நீங்க வேணுமினா பாருங்க, மிச்சம் ரெண்டுலயும் கழகத்தின் நி.தவும் நி.பொவும் மட்டும் தான் நிப்பாங்க,. பதவிவெறி அவர்களின் கண்களை மறைத்து விட்டது. அவர்கள் மட்டும் தான் எம்.பி ஆகனும், அவர்கள் மட்டும் தான் எம்எல்ஏ ஆகனும். அவர்கள் மட்டும் தான் வக்ஃப் வாரியத்துக்கு தலைவராகனும், அவர்கள் மட்டும் தான் சவூதி அரேபியாவுக்கு தூதர் ஆகனும். அதனால தான் நடந்து முடிந்த பொதுக்குழுவில் எவ்வித நிபந்தனையும் இன்றி இதே மாநில பொருப்பாளர்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டது. செயிச்சா எம்எல்ஏ, தோத்தா பழையபடி காலத்துக்கும் நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச்செயலாளர். ஏன் இவர்களைத்தவிர தமுமுகவில் வேறு யாருமே இல்லையா? அப்ப மிச்சம் மமகவிலும், தமுமுகவிலும் இருப்பவனெல்லாம் என்ன இழிச்சவாயனா? அவங்க சொன்னாங்களாம் இவங்க கேட்டாங்களாம். வர்த்தகர் அணிக்கு ஒன்னுங்கிறது உண்மையா இருக்கலாம்.மற்றபடி மாணவரணிக்கு ஒன்னு மருத்துவரணிக்கு ஒன்னு வழக்கறிஞர் அணிக்கு ஒன்னு, தொண்டரணிக்கு ஒன்னு, குண்டரணிக்கு ஒன்னுன்னு சொல்வதெல்லாம் சுத்த அல்வா!!! என சொன்னதும் அவர் முகம் வெளிறிப்போய் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தான் நேற்று மமகவுக்கு சேப்பாக்கம், ராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமுமுகவின் தலைமை அமைந்திருக்கும் தெருவில் நேற்று கசிந்த தகவல் படி சேப்பாக்கம் தொகுதியில் நிரந்தரப்பொதுச்செயலாளரும், ஆம்பூரில் கழகத்தின் நிரந்தரத்தலைவரும், இராமநாதபுரத்தில் மூடப்பட்ட பள்ளிவாசல் ஊரைச்சார்ந்த டிராவல்ஸ்காரரும் (அவர் ஆளும்கட்சியை விட்டு விலகி இவர்களிடம் இணைந்தால்), அல்லது அனார்கலியின் கணவர் பெயர் கொண்டவரும் போட்டியிட தீர்மானித்திருக்கிறார்களாம்.

யப்பா! தமுமுகவின் தங்கங்களே! உங்கள் கழகத்தின் நிரந்தர தலைவருக்கும், நிரந்தரப் பொதுச்செயலாளருக்கும் பதவிவெறி இல்லையென்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தீர்களே! இப்ப தெரிகிறதா உங்க கழகத்தின் நிரந்தரவான்களின் யோக்கியதை. அடச்சீ.....மானங்கெட்டவனுங்க

ஏன் இந்த அவசரம்? பேரம் படிந்து விட்டதோ?

அண்னன் ஜமாத்தில் பொதுக்குழுவிலும் தேர்தல் நிலைபாடு எடுக்கப்படவில்லை, அதேபோல செயற்குழுவிலும் தேர்தல் நிலைபாடு எடுக்கப்படவில்லை. ஏன் இன்னமும் பேரம் படியவில்லையோ? எனக் கேள்வி கேட்டிருக்கும் நம்மீது நம்மை விட அதிக அக்கறை கொண்டு பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு திரியும் அன்புக்கண்மணிகளுக்கு நாம் இங்கே விளக்கம் கொடுக்க வேண்டியது இருக்கிறது. அந்த வேலையற்ற வீணர்களுக்குத் தான் வேலையே இல்லை. என்னேரமும் ஓசி இன்டர்நெட்டில் உக்கார்ந்து கொண்டு வின்டிவியில் அடித்த காசை தலைவன் வாரி இறைக்க அதைப்பெற்றுக்கொண்டு வசைபாடுவதையே முழு நேரத்தொழிலாகக் கொண்டு திரியும் இவர்களுக்கு நாம் எக்ஸ்ட்ரா டைம் போட்டுத்தான் இதை சொல்லித்தொலைக்க வேண்டியிருகிறது.

பெட்டி,அல்லது 3 சீட்டு வேண்டும் என்று யாரிடமாவது ததஜ கேட்பதாக இருந்தால் பன்னீர் செல்வத்துக்கும், செங்கொட்டையனுக்கும் தூது மேல் தூது விட்டு , அண்ணே! நம்ம அப்பாயின்மெண்ட கொஞ்சம் அம்மாகிட்ட ஞாபகப்படுத்துங்க என சொல்லி சொல்லியே 3 மாசம் தவமாய்த் தவமிருந்து கடைசியில் பல்பொடி விளம்பரத்துக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை....

அல்லது ஒரு மேடை போட்டு ஒரு அமைப்பை மானங்கெட்டவர்களே! வெக்கங்கெட்டவர்களே! சமுதாயத்தை அடகுவைத்து 3 சீட்டு வாங்கியவர்களே! எங்களையும் கூட்டிக்கிட்டு போனா நாங்க என்ன ஒரு சீட்டா கேட்டுறுவோம்! நீங்க திருவல்லிக்கேணியில திமுக ஆட்களால குமுறக்குமுற அடிவாங்குன போது அதுக்கு சப்போர்ட் பண்ண நாங்க வேணும், ஆனா நாங்க நடத்துன உயர் நீதிமன்ற முற்றுகையில் கலந்து கொள்ள உங்கள் இயக்கத்தில் ஒரு பிரதிநிதி கூட இல்லையா?நீங்களெல்லாம் சமுதாய மானம் காப்பவர்களா என காய்ச்சி எடுத்து விட்டு கடைசியில் அவர்கள் உங்களை நல்லா "கவனிக்கிறோம்" என சொன்னதும் வாத்தியாரை உக்கார வச்சி போட்டோ எடுத்துக்கிட்டு, ஹிஹிஹிஹி நாங்க அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணந்தம்பிகதேன்.. என் அல்டாப்பு விடுவதாய் இருந்தாலும் பேரம் படிந்திருக்கும் என சொல்லலாமா.

ஆனால் சமுதாயத்திற்கு யார் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருகிறாரோ அவருக்குத்தான் வாக்கு என காலந்தாழ்த்தி கலந்தாலோசிப்பதன் பெயர் தான் உங்கள் பாணியில் ததஜ‌ மேல் சுமத்தப்படும் பேரத்தின் அர்த்தம். இப்ப நாங்க ஒன்னு கேக்குறோம்.

அது ஏனப்பா தெருவுக்கு ஒரு பேச்சு பேசிக்கிட்டு அலையிறீக! தம்புச்செட்டி தெருவுல கூட்டம் போடும் போது ஒரு பேச்சு, லிங்கிச்செட்டி தெருவில் ஒரு பேச்சு, அங்கப்ப நாயக்கன் தெருவில் ஒருபேச்சு என தெருவுகு ஒன்னா! ஜமாத்தில தான் கொள்கையும் இல்ல, பைலாவும் இல்ல. அட்லீஸ்ட் பேச்சிலையாவது சுத்தம் இருக்கனும்ல. மார்ச் 30 ஆம் தேதி தானப்பா பொதுக்குழுன்னு சொன்னீக, அப்றம் வாத்தியாரு சந்திச்சிட்டு போன பெறகு திடீர்னு ஏனப்பா மார்ச் 15 க்கு மாத்துனீக! உங்க பாசையில் சொல்லனும்னா பேரம் ‍படிஞ்சிருச்சோ! உங்களத்தான் யாருமே சீண்டலையே! வாத்தியாரு மாதிரி இத்துப்போன ஆளுக தான் நீங்க அவிகள என்னத்த திட்டினாலும் ஈன்னு பல்லக்காட்டிக்கிட்டே வந்து ஆதரவு கேப்பாக!

அதெல்லாம் சரி! பொதுக்குழு விசயத்துக்கு வரலாம். ஏன் திடீர்னு 15 நாள் முன்ன தள்ளுனீயன்னு நீங்க தான் சொல்லனும். தமிழகத்தில் ஒன்னு திமுக ஆட்சிக்கு வரும் இல்லாட்டி அதிமுக ஆட்சிக்கு வரும். அதனால தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் சமுதாயப்பணியாற்றி களைத்துப்போன சமுதாயத்தின் சிறந்த தலைவர் நீங்க இடஒதுக்கீடு கேட்டு அம்மாவுக்கும் மட்டும் கடிதம் எழுதியது என்ன காரணம்? கலைஞருக்கு ஏன் எழுதவில்லை? ஆக உங்கள் நிலைபாடு அன்றைக்கே உறுதியாகிவிட்ட நிலையில் பின்ன என்னத்துக்கு பொதுக்குழு?

சரி போனா போவுது. அதான் பேரம் படிஞ்சிருச்சில்ல. இருந்தாலும் பொதுக்குழுவில் என்ன மாதிரி தீர்மாணம் போடலாம் என்பதற்கு சில மாதிரிகள்

* நம் சமுதாயம் மானம் காக்கப் புறப்பட்டுப் போய் மானமிழந்து வெறும் 3சீட்டுக்கு பல்லைக்காட்டி பல்பொடி விளம்பரத்திற்கு போஸ் கொடுத்த கழகத்தின் நிரந்தரத் தலைவரை, பாஜக காரன் கூட சொல்லத்தயங்கும் மண்ணைக்கவ்வ வைப்போம் என்ற கோசத்தை வைத்த அண்ணன் ஜமாத்தை இந்தப் பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

* என்னதான் 3 சீட்டுக்கு மானமிழந்தாலும், நாம் மேடை போட்டு இவர்களை படுகேவலப்படுத்தினாலும் அதையெல்லாம் மறந்து எங்களை எப்படியாவது கரையேத்துங்க, நானும் பொதுச்செயலாளரும் ஜெயிச்சிட்டா போதும் என்ற ரீதியில் நம்மிடத்துக்கே நேரிலே வந்து குமுறிக்குமுறி அழுத வாத்தியார் மீது இர‌க்கம் காட்டும் விதமாக வருகின்ற தேர்தலில் அவர்களுக்காக சூறாவளி சுழல் பிரச்சாரம் செய்ய நமது பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது

* கள்ள பைலா வைத்து காலத்தை ஓட்டியதை கையும் களவுமாக கண்டுபிடித்த கூட்டத்தை நம் ஜமாத் கண்டிக்கிறது. அதே நேரம் நம் இயக்கத்துக்கு இன்று வரை ஒரு பைலா இல்லையே என்பதை கருத்தில் கொண்டு விரைவிலேயே 10 பேர் கொண்ட குழு அமைத்து ஒரு பைலாவை தயார் செய்து பைலா பற்றி கேட்டு தொந்தரவு செய்பவர்கள் முகத்தில் கரியை பூசுவது என இந்த பொதுக்குழு முடிவுசெய்கிறது

* கொஞ்சம் கூட சிந்தனை திறனும், அறிவும் இல்லாதவர்களெல்லாம் நம் ஜமாத்தின் முக்கிய பொருப்புகளில் வீற்றிருப்பதைக் கண்டு இந்த பொதுக்குழு கவலை கொள்கிறது. அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு அதற்கென தனி ஆசிரியரை இல்லை இல்லை நம் சகோதரர்கள் வேண்டுகோளுக்கிணங்க பெண் ஆசிரியையை நியமிக்க இந்த பொதுக்குழு பரிந்துரை செய்கிறது

* பைலா இல்லாத காரணத்தால் இப்போது இருக்கும் மாநில நிர்வாகிகளே காலத்துக்கும் நீடிப்பார்கள் என இப்பொதுக்குழு தீர்மாணிக்கிறது.

* குவைத் எண்ணெய் வயல் விவகாரத்தில் அண்ணன் ஜமாத் இவ்வளவு தெளிவாக பதில் கொடுத்தும் அதையெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இன்னும் பதில் தரவில்லை இன்னும் பதில் தரவில்லை என ஒரு முழு பைத்தியத்திற்கு ஈடாக கூக்குரலிட்டு நாம் சொல்வது தான் சரி என மக்களை நம்ப வைக்க விடிய விடிய தூக்கம் விட்டு யோசித்து ஏதாவது ஒன்றை உளறிவைத்து வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டு கதவிடுக்கில் மாட்டிய எலி போல தவிக்கும் அப்துல் முஹைமீனை இந்தப் பொதுக்குழு பாராட்டுகிறது. அவர் விரைவில் குணமடைய இந்த பொதுக்குழு பிரார்த்திக்கிறது

Saturday, March 19, 2011

வரக்கூடிய தேர்தலில் மமகவின் செயல்பாடுகள்



வரக்கூடிய தேர்தலில் மமகவின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் ஒரு கலந்தாய்வுக்கூட்டம் தமுமுகவின் மாநிலத் தலைமையில் நடந்தது. இந்தகூட்டத்தில் தமுமுக மற்றும் மமகவின் முக்கியப்பொருப்பாளர்கள் மற்றும் அணியினர் கலந்து கொண்டார்களாம். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமுமுக மற்றும் மமகவின் செயல்பாடுகள் வரும் தேர்தலில் எப்படி இருக்க வேண்டும் என்ற ரீதியில் கலந்துரையாடல் நடந்திருக்கிறது.

இந்தக்கலந்துரையாடலின் போது வரும் தேர்தலில் கழகத்தின் நிரந்தரத் தலைவரையும், நிரந்தர பொதுச்செயலாளரையும் எப்படியாவது எம்எல்ஏ ஆக்கிவிடவேண்டும் என்பதற்காக இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு அஇஅதிமுக கூட்டணிக்கு 234 தொகுதிகளிலும் கடுமையாக பாடுபட்டு உழைப்பது என்ற ரீதியில் முடிவுகள் எடுக்கப்பட்டதாம்.(பாவம்! இஸ்லாமிய சமுதாயம் 3 வாங்கிக்கொண்டு 300க்கு உழைக்கும் என்ற கேவல நிலையை உருவாக்கி விட்டார்கள் இந்த மமவினர்)

மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் கலந்து கொண்டவர்களின் வாதங்கள் மிகக் கடுமையாக இருந்ததாம். அதாவது நீங்கள் வெறும் 3 சீட்டுக்களை வாங்கிக்கொண்டு நம் சமுதாயத்திற்கே பெரிய தலைகுணிவை ஏற்படுத்தி விட்டீர்களே என்ற ரீதியில் கருத்துக்களை வெளிப்படுத்தினார்களாம்.(பரவாயில்லை தமுமுக தொண்டர்கள் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்) ஆனால் தமுமுகவின் நிரந்தரத் தலைவரும் நிரந்தரப் பொதுச்செயலாளரும் ரோஸ்டர் முறையை எப்படி நியாயப்படுத்தினார்களோ அதே போல சொந்தச்சின்னம் என்ற கருத்தை முன்வைத்து அவர்களைக் கூல் படுத்தினார்களாம்., இதை ஒப்புக்கொண்ட மாணவர் அணியினரும் வழக்கறிஞர் அணியினரும் தமுமுகவின் வெப்சைட்டில் கழகம் 3 சீட்டுக்கள் பெற்றதற்கு ஆதரவாக வந்த வெறும் 7 கருத்துகளை மட்டுமே தான் வெளியிட்டீர்கள், ஆனால் நீங்கள் 3 சீட்டு வாங்கியதற்கு எதிராக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருத்துக்களை ஏன் வெளியிடவில்லை எனக் கேட்டார்களாம். இந்த இடத்தில் விழி பிதுங்கி தலைவரும், பொதுச்செயலாளரும் விழிக்க , நிலைமையை உணர்ந்த தமீம் அன்சாரி ஒருவகையாய் சமாளித்தாராம்.

அதாவது எதிரிகள் (வேற யாரு?) கூட தவறான கருத்துக்களைப் பதிவுசெய்யலாம், பதிவும் செய்கிறார்கள்.,ஆகவே இதை நாங்கள் முறைப்படுத்தினோம் என்றார்களாம். உடனே பதில் தாக்குதல் நடத்திய மாணவர் அணியினர், நம் வெப்சைட்டில் இருக்கும் ஒவ்வொரு செய்திக்கும் எவ்வித கருத்துக்களையும் நீங்கள் வெளியிடுவதில்லை, இதைப்பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நீங்கள் ஏன் அறியவில்லை எனக் கேட்டார்களாம். அதையும் பூசி மெழுகிய அன்சாரி, உங்கள் தொகுதியில் வசூல் நிலவரம் எப்படி என்பதை கேட்க, இடைமறித்த மாணவர் அணியினர் எங்களுக்கு தேர்தல் குறித்து இன்னமும் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார்களாம். அனுமதி வழங்கப்பட்டவுடன் அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாம் கழகக்குழு.


அதாவது வரும் தேர்தலில் மாணவர் அணி சார்பில் ஒருவரும், வழக்கறிஞர் அணி சார்பில் ஒருவரும் போட்டியிட வேண்டும் என தெரிவித்தார்களாம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாமா குழுவினர் ஒரு ரகசிய செய்தியைப் போட்டு உடைத்தார்களாம். அதாவது சென்ற முறை வர்த்தகர் அணியில் தங்க முட்டையிடும் வாத்தாய் இருந்த பள்ளிவாசல் மூடிய ஊர்காரரை கழகம் கண்டுகொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் தான் ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டார். அவரைப் போல இனி யாரும் கழகத்தைவிட்டு கழன்று விடக்கூடாது என்பதற்காக இம்முறை வர்த்தகர் அணிக்கு ஒரு சீட்டு ஒதுக்குவது என கழகம் முடிவெடுத்திருக்கிறது.


எனவே மிச்சமிருப்பது இரண்டு சீட்டு தான் (ஒன்னு உனக்க்க்க்கு, இன்னொன்னு எனக்க்க்க்கு). எனவே இனி வேறு நபர்களுக்கு ஒதுக்குவது சிரமம் என நிரந்தர தலைவர் விளக்க, தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்த மாணவர் அணியினர் முடியவே முடியாது என சொல்லியிருக்கின்றனர். அத்தோடு பேசிய அவர்கள் நீங்களும், பொதுச்செயலாளரும் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டுயிட்டு விட்டீர்கள். எனவே நீங்கள் திரும்ப சட்டமன்றத்திற்கு போட்டியிடுவது தகுதி குறைவாக இருக்கும். அத்தோடு கழகத்திற்கு வரும் பதவிகளை எல்லாம் நீங்கள் மட்டுமே அனுபவிக்கிறீர்கள், இதனால் தான் உங்களை எதிரிகள் பதவி வெறி பிடித்தவர்கள் என தூற்றுகிறார்கள். அதுமட்டுமின்றி ஐநா சபையிலேயே ஆங்கில புலமையாற்றிய நீங்கள் தான் நாடாளுமன்றம் போக மிகத்தகுதியான நபர் (கழகத்தின் நிரந்தரத் தலைவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அதாவது நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு முன்னதாக ஊருக்கு ஊர் சென்று மீட்டிங் போட்டார். அதிலே அவர் பேசிய பேச்சுக்கள், " " நாடாளுமன்றத்திற்குச் சென்று நம்முடைய குறைகளை ”Mr.Prime Minister, What about our Reservation?”“ என்று ஆங்கிலத்திலே கேட்பதற்கு ஆள் இல்லையே! என்று சொன்னாரு.

அப்ப நாம நெனச்சோம், சே! தலைவர் இன்னாமா பீல் பண்ணி கூவுறாருன்னு, அப்பறம் தான தெரிஞ்சது ,அந்த இங்கிலிபீசு பேசுற ஆளுன்னு அவரத்தான் சொன்னாருன்னு) எனவே நீங்கள் தான் நாடாளுமன்றம் செல்லத் தகுதியான நபர். அதுமட்டுமின்றி உங்கள் மற்றும் பொதுச்செயலாளரின் வழிகாட்டுதல் கழகத்திற்கு அவசியம் தேவை. எனவே நீங்கள் வெளியே இருந்து வழிகாட்டினால் தான் எங்களைப் போன்ற இளைஞர்கள் நாளை இந்தக் கழகத்தைக் கட்டிக்காகக் இயலும் எனவும் வலியுறுத்தினார்களாம். இதைக்கேட்டு நிரந்தர தலைவரும், பொதுச்செயலாளரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே அமைதி காக்க ஆடிப்போனதாம் கழகத்தின் சபை.


நீண்ட நேர மௌணத்திற்கு பிறகு இதைப்பற்றி இஷா தொழுகைக்குப் பின் முடிவெடுக்கலாம் என்ற ரீதியில் பெருந்தலைகள் இழுத்துவிட, மாணவர் அணியும், வழக்கறிஞர் அணியும் இஷா தொழுகை வரை காத்திருந்ததாம். ஆனால் இஷா முடிந்தும் ஒரு முடிவை அறிவிக்காமல் காலம் கடந்து செல்லவே கடைசியில் நாளை முடிவு சொல்கிறோம் என கழகத்தினர் இவர்களை அனுப்பிவைத்தார்களாம். இதற்கிடையில் இரவோடு இரவாக மாணவர் அணியைச் சார்ந்த சிறந்த நிர்வாகி பொருள் வரும் பெயர் கொண்டவருக்கு போன் போட்டு, என்னப்பா இப்படி பண்றீங்க, உங்க முடிவை மாத்துங்கப்பா என பொதுச்செயலாளர் பேச, இல்லண்ணே! பசங்க எல்லாம் ரொம்பவே காட்டமாஆஆ இருக்காங்க, நீயூ காலேஜில வேற இப்ப ஏதோ கூட்டம் போடுறாங்களாம், இந்த முடிவை நம்ம மாற்றிக்கொண்டால் நாம் மாணவர் அணியை இழக்க வேண்டி வரும் என சொல்ல, அதிர்ந்து போன கழகத்தின் நிரந்தர தலைவரும், பொதுச்செயலாளரும், வழக்கறிஞர் அணியைத் தொடர்பு கொள்ள அங்கே கடைசிவரை தொடர்பு கிடைக்கவேயில்லையாம்.

ஒரு வகையாய் மறுநாள் காலை 10 மணிக்கே மாணவர் அணியும், வழக்கறிஞர் அணியும் தலைமைக்கு வந்து சேர அவர்களை மசூரா அறையில் அமரவைத்து விட்டு பல‌ மணி நேரங்களுக்குப்பிறகு அவர்களை சந்திக்க ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தார்களாம். மீண்டும் ஒருமுறை அவர்களிடம், அறிமுகமான முகமாக இருந்தால் நல்ல வாக்குகள் கிடைக்கும் அதனால் தான் கழகத்தின் நிரந்தர தலைவரும் பொதுச்செயலாளரும் போட்டியிட விரும்புகிறார்கள் என மமகவின் தலைவர் சால்ஜாப்பு சொல்ல, கடைசிவரை மறுத்தார்களாம் மாணவர் அணியும் வழக்கறிஞர் அணியும். நேரம் நீண்டு கொண்டே செல்ல இறுதியில் நாளை வாருங்கள் பேசிக்கொள்ளலாம், நாங்கள் அம்மாவிடம் சென்று அட்னன்ஸ் போட்டால் தான் எந்தெந்த தொகுதி கிடைக்கும் என்பது தெரியும் என கழகத்தின் நிதவும் நிபொவும் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல், இன்றைக்கே முடிவைச்சொல்லுங்கள் என அடம்பிடிக்க இவர்கள் செயலிழந்து தான் போனார்களாம்.

இறுதியில் இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு வரும் தேர்தலில்

3 சீட்டுக்களில் ஒன்றை ஏற்கனவே வர்த்தகர் அணிக்கு வழங்கிவிட்டதால், மீதமிருக்கும் இரண்டையும் மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் அணி என அணிக்கு ஒருவர் வீதம் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்களாம் சமாதானக்குழுவினர். மாணவர் அணியில் இடம்பெற்றிருக்கும் ததஜவின் தலைவர் பெயர் கொண்டவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும், வர்த்தகர் அணியில் மூடப்பட்ட பள்ளிவாசல் ஊர்க்காரரான டிராவல்ஸ்காரருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் செய்தி வருகிறது. டிராவல்ஸ்காரர் இப்போது ஆளுங்கட்சியில் இருந்தாலும் தங்கமுட்டையிடும் வாத்தான அவரை மீண்டும் உள்ளே இழுக்கவே இது செய்யப்படுகிறாம்.

இதைப்பற்றி நம்மிடம் சொல்லி பெருமையடித்த அந்த அப்பாவி மாணவரணிக்காரரிடம் நாம் சொல்லிய பதில் இதுதான்,

வர்த்தகர் அணிக்கு கொடுப்பது உண்மையாக இருக்கும். ஆனா நீங்க வேணுமினா பாருங்க, மிச்சம் ரெண்டுலயும் கழகத்தின் நி.தவும் நி.பொவும் மட்டும் தான் நிப்பாங்க,. பதவிவெறி அவர்களின் கண்களை மறைத்து விட்டது. அவர்கள் மட்டும் தான் எம்.பி ஆகனும், அவர்கள் மட்டும் தான் எம்எல்ஏ ஆகனும். அவர்கள் மட்டும் தான் வக்ஃப் வாரியத்துக்கு தலைவராகனும், அவர்கள் மட்டும் தான் சவூதி அரேபியாவுக்கு தூதர் ஆகனும். அதனால தான் நடந்து முடிந்த பொதுக்குழுவில் எவ்வித நிபந்தனையும் இன்றி இதே மாநில பொருப்பாளர்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டது. செயிச்சா எம்எல்ஏ, தோத்தா பழையபடி காலத்துக்கும் நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச்செயலாளர். ஏன் இவர்களைத்தவிர தமுமுகவில் வேறு யாருமே இல்லையா? அப்ப மிச்சம் மமகவிலும், தமுமுகவிலும் இருப்பவனெல்லாம் என்ன இழிச்சவாயனா? அவங்க சொன்னாங்களாம் இவங்க கேட்டாங்களாம். வர்த்தகர் அணிக்கு ஒன்னுங்கிறது உண்மையா இருக்கலாம்.மற்றபடி மாணவரணிக்கு ஒன்னு மருத்துவரணிக்கு ஒன்னு வழக்கறிஞர் அணிக்கு ஒன்னு, தொண்டரணிக்கு ஒன்னு, குண்டரணிக்கு ஒன்னுன்னு சொல்வதெல்லாம் சுத்த அல்வா!!! என சொன்னதும் அவர் முகம் வெளிறிப்போய் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தான் நேற்று மமகவுக்கு சேப்பாக்கம், ராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமுமுகவின் தலைமை அமைந்திருக்கும் தெருவில் நேற்று கசிந்த தகவல் படி சேப்பாக்கம் தொகுதியில் நிரந்தரப்பொதுச்செயலாளரும், ஆம்பூரில் கழகத்தின் நிரந்தரத்தலைவரும், இராமநாதபுரத்தில் மூடப்பட்ட பள்ளிவாசல் ஊரைச்சார்ந்த டிராவல்ஸ்காரரும் (அவர் ஆளும்கட்சியை விட்டு விலகி இவர்களிடம் இணைந்தால்), அல்லது அனார்கலியின் கணவர் பெயர் கொண்டவரும் போட்டியிட தீர்மானித்திருக்கிறார்களாம்.

யப்பா! தமுமுகவின் தங்கங்களே! உங்கள் கழகத்தின் நிரந்தர தலைவருக்கும், நிரந்தரப் பொதுச்செயலாளருக்கும் பதவிவெறி இல்லையென்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தீர்களே! இப்ப தெரிகிறதா உங்க கழகத்தின் நிரந்தரவான்களின் யோக்கியதை. அடச்சீ.....மானங்கெட்டவனுங்க...

Tuesday, March 8, 2011

எப்படி இருந்த நாங்க‌ இப்படி ஆயிட்டோம்





அன்று

கழகத்தின் நிரந்தர தலைவர் அவர்கள் திமுகவையும் அதன் தலைவரையும் வாய்மணக்க புகழ்ந்ததும், ஜெவின் ஆட்சி இந்துத்துவா ஆட்சி என்றும், ஜெயலலிதா ஒரு பாஜகவின் பினாமி என்றும் தினகரனுக்கு தலைவர் அளித்த பேட்டி...


தொடர்ந்து

கலைஞருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி சோப்பு போட்ட காட்சி


இன்று

அம்மா...அம்மா.. என 3 மாசம் காத்திருந்து காத்திருந்து கடைசியில் அப்பாயிண்மென்ட் கிடைத்தவுடன் கோபால் பல்பொடி விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் காட்சி


கலைஞர் சிறையில் அடைத்தார் என நக்கீரனுக்கு பேட்டியளித்த காட்சி


கட்சி ஆரம்பித்து கொஞ்ச நாள் தான் ஆச்சி. ஆனால் வளைந்து நெளிந்து குழைந்து விழுந்து தவழ்ந்து புகழ்ந்து இகழ்ந்து மகிழ்ந்து....என்னத்த சொல்ல பச்சை அரசியல்வியாதி ஆகிவிட்ட இவர்களையா இந்த சமுதாயம் ஆதரிக்கப் போகிறது?? மக்களே சிந்திப்பீர்..

Sunday, March 6, 2011

வைகோ தியரியா? சைக்கோ தியரியா?


வைகோ தியரி என்பது என்ன? என்பதை மிக சிம்பிளாக புரிந்து கொள்ள உதாரணம், ஒரு திருடன் திருடுகிறான். அவனைப் பிடித்து மக்கள் தர்மஅடி கொடுத்து விட்டு, "ஏன்டா இப்படி எல்லாரையும் சேர்த்துக் கேவலப்படுத்துற" எனக் கேட்ட போது அவன் சொன்னானாம் நானாவது 10 ரூபாய் தான் திருடுனேன், அவனைப் பாருங்க,அவன் 50 ரூபாய் திருடிவிட்டான்,அப்படின்னா அவனும் கேவலப்பட்டவனா? என சொல்வது போலத்தான் மமகவினர் வைக்கும் வைகோ தியரியும். நீ மானங்கெட்டுப் போய் 3சீட்டுக்கு ச‌முதாயத்தை அடகுவைத்து விட்டாயே! உனக்கு கொஞ்சம் கூட சூடு,சுரனை கிடையாதா எனக்கேட்டால், அதற்கு வைகோவைப் பாருங்கள் அப்படின்னா அவரும் மானங்கெட்டவரா எனக்கேட்கிறார்கள்.

அவர்கள் எடுத்து வைக்கும் சொத்தை வாதம் இது தான்


"கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் 35தொகுதிகள் பெற்றார் வைகோ. இந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தேர்தலில் 6 தொகுதிகள் பெறவேண்டும். ஆனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 4தொகுதிகளைத் தான் பெற்றார். அப்படியாயின் வைகோ மானமிழந்து விட்டாரா?"


இது தான் வைகோ தியரி. வைகோ 2006 ல் 35 தொகுதிகளை மனமார ஏற்றுக்கொண்டார். அதேபோல 2009 தேர்தலில் 4 தொகுதிகளையும் மனமார பெற்றுக்கொண்டார். அதுமட்டுமின்றி அவர் எந்த நிலையிலும் நான் என் சமுதாய மானம் காக்கப்போகிறேன் என சொல்லவில்லை. ஆனால் மமகவினர் கட்சி ஆரம்பித்ததன் நோக்கம், தமிழக அரசியலில் இருக்கும் ஒரு சீட்டுக் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பது தான். நல்லவேள நாமெல்லாம் கொஞ்சம் உசாரா இருக்கோம். இல்லாட்டா, பாத்தீங்களா! நாங்க ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்து அதிலே வெற்றியும் பெற்று இப்போது 3 சீட்டு வாங்கி நம் சமுதாய மானத்தைக் காத்துவிட்டோம் என சொன்னாலும் சொல்லியிருப்பார்கள். இவர்களிடம் ரொம்பத்தான் உசாரா இருக்கனும் போல, தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டு தான் தூங்க வேண்டும். இப்போது வைகோ தியரிக்கு வரலாம். வைகோ மனமார இரண்டு வகை சீட்டுக்களையும் ஏற்றுக்கொண்டார்.


ஆனால் ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என கிளம்பிய போர்படை(?) கலைஞரிடம் நடத்திய பல கட்டப்பேச்சி வார்த்தையில் (என்னத்த கருமம் பேச்சிவார்த்த, 2 சீட்டு கேட்டு கலைஞரை இம்சை படுத்தியது தான்) கலைஞர் இவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதைவைச்சாத்தி விட்டார். ஊரெல்லாம் பயணம் சொல்லி கடைசியில் ஹஜ்ஜிக்கு போக விசா கிடைக்காமல் இருந்தவருக்கு தலையில் துண்டுபோட்ட பெரிய ஹசரத் வழியைக்காட்டி சென்னையிலே ஹஜ் செய்ய வைத்தது போல, இனம் இனத்தோடு சேரும் என்ற ரீதியில் வீராப்பாய் பேசி சரத்துகுமார், கிருஷ்னசாமி என லட்டர்பேடுகளோடு லட்டர்பேடாக தனித்து நின்று இவர்கள் பெற்ற‌ வாக்குகளைக் கண்டு அன்றைக்கு நரசிம்மராவ் இருந்தால் கூட தரையிலே உருண்டு புரண்டு சிரித்திருப்பார்.


ஆக இவர்கள் ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்தவர்கள். குறைந்தபட்சம் 2 சீட்டாவது தந்து எங்கள் மானத்தை காப்பாத்துங்கள் என கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சி கடைசியாக நிராயுதபாணியாக 4 சீட்டில் நின்று மானம் காத்தார்கள் இந்த மாவீரர்கள். ஆக இவர்கள் குறைந்தபட்சம் ஒப்புக்கொண்டது 2 சீட்டு. மனமார இவர்களே தேர்ந்தெடுத்து நின்றது 4சீட்டு. ஆக வைகோ தியரிப்படி குறைந்தபட்சம் 2 அதிகபட்சம் 4.

வைகோ தியரிப்படி

சட்டமன்றம் X 6 = சீட்டுகள்

அல்லது

நாடாளுமன்றம் /6 = சீட்டுகள்

2006 தேர்தலில்

35 சட்டமன்றம் / 6 = 5.83 அதாவது 6 நாடாளுமன்றம்

ஆனால் 2009 தேர்தலில்

4 நாடாளுமன்றம் X 6 = 24 சட்டமன்றம்

ஆக மொத்தம்

சட்டமன்றக்கணக்கில்

35‍ – 24 = 11 வித்தியாசம்

நாடாளுமன்றக் கணக்கில்

6‍ – 4 = 2 வித்தியாசம்

ஆனால் உங்கள் கணக்குப்படி

போட்டியிட்ட‌ 4 தொகுதிகளுக்கு

4 நாடாளுமன்றம் X 6 = 24 சட்டமன்றம்


அல்லது ஒரு சீட்டு அவமானத்தை துடைத்து மானம் காக்க கடைசியாக கெஞ்சிக்கெஞ்சி கேட்ட 2 சீட்டு கணக்குக்கு

2 நாடாளுமன்றம் X 6 = 12 சட்டமன்றம்

அட போனா போகுது வழக்கமாய வழங்கும் ஒரு சீட்டு கலாச்சாரத்தின் படி

6 தொகுதிகளாவது பெற்றுத்தொலைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வாங்கிய 3 சீட்டுக்கு வரும் ரிசல்ட் வெறும் அரை சதவிகிதம் தான்.



இப்படி ஒரு மோசமான காரியத்தை செய்து விட்டு இவர்கள் வைகோ தியரியைச் சொல்லி வைக்க,அதை நாம் இப்போது +2 படிக்கும் பையன் கணக்கு பரீட்சை எழுதுவது போல வாத்தியாருக்கே விளக்க வேண்டியதாக இருக்கிறது. அதான் சொல்றது படிக்கும் போதே ஒழுங்கா படிக்கனும் என்று. இல்லாவிட்டால் இந்த மாதிரி தான் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கும். ஒருவேளை போலி டாக்டர்கள் போல இவரு போலி வாத்தியாரா இருப்பாரோ? தெரியவில்லை.

என்னமோ நடத்துறாங்க பாடம், அட ஒன்னுமே புரியல மேடம்ங்கிற கதயா தான் இருக்கு.

ஏற்கனவே இருந்தத சுத்தம் பண்ணப் போறேன்னு சொன்னவன் அத இன்னும் கொஞ்சம் நாரடிச்ச கதயா, இன்னும் சொல்லப்போனா உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு குளுக்கோஸ் ஏற்றப் போனவன் அங்கே ஓடிக்கொண்டிருந்த குளுக்கோஸ் வயரையும் அறுத்து விட்ட கதையா இந்த சுய நலக்கூட்டம் இருந்ததையும் கெடுத்து விட்டு வந்திருக்கிறது. வழக்கமாக 4 அல்லது 5 சீட்டு பெறும் முஸ்லீம் லீக் கூட இவர்களின் மானங்கெட்டத் தனத்தால் அவர்களுக்கும் 3 சீட்டே வழங்கப்பட்டு விட்டது.


இவர்கள் தான் மானம் காக்க வந்தவர்களாம்!!! இந்தக் கொடுமைய எங்க போய்ச் சொல்ல???
free counters

Saturday, March 5, 2011

கோவணத்தை இழந்த மானம் காக்கும் ஸ்பெசலிஸ்ட்


உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா:

தமிழில் ஒரு பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது. ”உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா”

இவர்களை தற்போது நினைத்தால் இந்தப்பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது. தி.மு.க அணியில் தந்த ஒரு எம்.பி சீட்டை நாங்கள் வாங்க மாட்டோம். எங்களுக்கு சமுதாய மானம் காப்பதுதான் முக்கியமே தவிர, இந்த சீட்டுக்கள் தேவையில்லை என வீராப்பு பேசியவர்கள் தற்போது அதைவிட குறைவான சட்டமன்ற தொகுதிகளை பெற்று கேவலப்பட்டுள்ளார்கள் என்றால் உள்ளதையும் இழந்து நிற்கும் இவர்களை என்னவென்பது.

கோவணத்தை இழந்த மானம் காக்கும் ஸ்பெசலிஸ்ட்:

கோவணம் கட்டியிருந்த ஒருவன் இன்னொருவனிடத்தில் தனக்கு உடுத்த துணியில்லை. எனக்கு மானம் தான் முக்கியம். எனவே எனக்கு உடுத்த, எனது மானம் காக்க அழகான ஒரு வேட்டி வேண்டும் என்று கேட்டானாம். அதற்கு வேட்டிவைத்திருந்தவனோ என்னிடத்தில் வேட்டி இருந்தாலும் அதை நான் உனக்குத்தரமாட்டேன். என்னிடத்தில் உள்ள அரைக்கால் டவுசரை வேண்டுமானால் தருகிறேன் என்று சொல்ல, அதை மறுத்த இந்த மானம் காக்கும் பேர்வழி எனக்கு வேட்டிதான் முக்கியம், எனக்கு மானம்தான் முக்கியம் நீ தரும் அரைக்கால் டவுசர் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று கூறி அவனிடத்தில் சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டானாம்.



அரைக்கால் டவுசர் போய் அம்மனமான கதை :

அரைக்கால் டவுசர் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று கூறி ரோஷத்தோடு வந்தவனுக்கு உண்மையிலேயே மான ஈனம் இருக்குமேயானால், சூடு சொரணை இருக்குமேயானால், வெட்கம் என்ற உணர்வு என்று ஒன்று இருக்குமேயானால் இவன் வேறு எவனிடத்திலாவது சென்று வேட்டியை வாங்கியிருக்க வேண்டும் அல்லது தானாக தனித்து நின்று வேட்டியை தயார் செய்து இருக்க வேண்டும். வேட்டிக்கு வக்கற்ற இந்த கோவணம் உடுத்திய பேர்வழி இன்னொருவனிடத்தில் சென்றானாம். அவனிடத்தில் மானத்தை பற்றி பேசிய இந்த

மானம் காக்கும் ஸ்பெஷலிஸ்ட், வேட்டியை வாங்குவதற்கு பதிலாக கட்டியிருந்த கோவணத்தை கழற்றிக்கொடுத்துவிட்டு வந்தால் எப்படி கேவலமாக இருக்குமோ அதுபோன்றுதான் தற்போது மானம் காக்க புறப்பட்ட இந்த ம.ம.கட்சியின் நிலை உள்ளது என்பதை யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

மமகவும் வாழைப்பழமும்


ம.ம.க வினருக்கு வழைப்பழச் சின்னம் ஞாபகமிருக்கிறதா?

மமக வினர் தற்போது அதிமுக விடத்தில் மூன்று சீட்டுகளை வாங்கிக்கொண்டு கேவலப்பட்டு நிற்கும் வேளையில் தங்களது அந்த கேவலத்தை மறைப்பதற்கு பயங்கரமான பில்டப்புகளை கொடுத்து வருகின்றனர்.

பில்டப் நம்பர்: 1

20 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் அரசியல் அரசியல் அரங்கில் எழுச்சியாம் (?)

மேற்கண்டவாறு தங்களது முதல் பில்டப்பை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

சீட்டுக்காக நாங்கள் எத்தகைய கேவலத்தனத்தையும் அனுபவிக்கத்தயார் என்று இந்த அளவுக்கு கீழ்நிலையில் இறங்கிவிட்டு தற்போது அதிமுக விடத்தில் 3 சீட்டுகளை வாங்கிவிட்டு அது மாபெரும் எழுச்சி என்று கூறுகின்றார்களே! இவர்களுக்கு சென்ற தேர்தலில் வாழைப்பழ சின்னத்தில் கலைஞரை எதிர்த்து போட்டியிட்டாரே அந்த சகோதரரை ஞாபகப்படுத்துகின்றோம்.

இவர்கள் தங்கள் இயக்கம் தமிழகம் முழுக்க கொடிகட்டி பறக்கின்றது(?) என்று கூறிக்கொண்டு 3 சீட்டுகளுக்காக தங்களது மானத்தை அடகுவைத்து நிற்கும் இவ்வேளையில் கடந்த தேர்தலில் காயிதே மில்லத் அவர்களின் பேரன் தாவூத் மியாகான் அதிமுக அணியில் தனிஆளாக இருந்து ஒரு தொகுதியைப்பெற்று தனிச்சின்னத்தில் அதாவது வாழைப்பழ சின்னத்தில் போட்டியிட்டார். அப்படியானால், இவ்வளவு பெரிய(?) பேரியக்கமாக இருந்த்து கொண்டு 3தொகுதி பெற்று கேவலப்படுவதே மாபெரும் எழுச்சி என்றால், தனியொரு ஆளாக இருந்து தாவூத் மியாகான் அவர்கள் அதிமுக அணியில் ஒருதொகுதியை பெற்றாரே அது மாபெரும் மகத்தான எழுச்சி என்று ஏன் இவர்கள் சென்ற தேர்தலில் சொல்லவில்லை. தாவூத் மியாகானையும் வாழைப்பழ சின்னத்தையும் மமகட்சியினர் மறந்திருந்தாலும், மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.


பில்டப் நம்பர் 2:

3தொகுதியை பெற்று மகத்தான எழுச்சி கண்ட மமகவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிகின்றதாம்!

இதுதான் அவர்களது இரண்டாவது பில்டப்.

இந்த அளவிற்கு மானம் கெட்டு கேவலப்பட்டு மரியாதையை விற்றுவிட்டு நிற்கிறீர்களே என சமுதாய மக்கள் இவர்களை காரித்துப்புவது இவர்களுக்கு வாழ்த்துக்களாகவும், பாராட்டுக்களாகவும் தெரிந்தால் நாம் என்ன செய்வது?

பில்டப் 3:

தமிழகத்தில் 3 தொகுதிகளும், பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியையும் அதிமுக எங்களுக்கு ஒதுக்கியுள்ளது.

தங்களுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதாக சொல்வதிலும் இவர்கள் எத்தகைய பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்கள் என்பதை நாம் சமுதாய மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்கட்ட கடமைப்பட்டுள்ளோம்.

இவர்கள் தங்களது பத்திரிக்கையில் அதிமுக வுடனான ஒப்பந்தப்பத்திரத்தை வெளியிடவில்லை. வெளியிட்டால் இவர்கள் சொல்லும் பொய்கள் உலகுக்கு அம்பலமாகிவிடும் என்பதால் அதை மறைத்துள்ளனர்.

அந்த ஒப்பந்தப்பத்திரத்தை நாம் வெளியிடுகின்றோம். இவர்கள் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி தங்களுக்கு ஒதுக்குவதாக அதிமுக தலைமை சொன்னது என்று வாயாலேயே தான் வண்டி ஓட்டியுள்ளார்களே தவிர! அந்த ஒப்பந்தப் பத்திரத்தையில் அதைப்பற்றி எந்தவிதமான எழுத்துமானமும் இல்லை. அதிலும் இவர்கள் கேவலப்பட்டுதான் நிற்கிறார்கள். அந்த விஷயத்தையும் மறைத்துவிட்டுத்தான் 3+1 = 4 என்று தாங்களும் மடையர்களாகி தாங்கள் மடையர்களானதை மறைக்க மக்களையும் மடையர்களாக்கப்பார்க்கிறார்கள். சமுதாயம் இந்த துரோகிகள் விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்

பரிசுக்கேள்வி:

அதிமுகவுக்கு மமகவுக்கும் ஏற்பட்ட தொகுதி உடன்பாட்டு அறிக்கை இதோ உங்கள் பார்வைக்கு. இந்த உடன்பாட்டுப் பத்திரத்தில் பாண்டிச்சேரியில் ஒரு சீட் மமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற வாசகத்தை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையும், பாண்டிச்சேரியை சுற்றிப்பார்க்க மூன்று நாட்கள் இலவச பயணப்படியும் வழங்கப்படும்.

குறிப்பு: இந்தப் போட்டியில் பொதுமக்கள்,மமகவின் தொண்டர்கள், மமக சார்பாக மானம் காக்க கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பரிசு உடனடியாக வழங்கப்படும்.

Tuesday, March 1, 2011

தமிழ்நாடு மூனுசீட்டு முன்னேற்றக் கழகம்


பதவி ஆசையெல்லாம் அறவே கிடையாது, எங்களுக்கு சமுதாய மானமே முக்கியம் என நம் சமுதாயத்தின் மானம் காக்கப்புறப்பட்ட நம் முன்னாள் சகாக்கள் இன்றைக்கு வெறும் 3 சீட்டுக்களை வாங்கிக்கொண்டு வாய்கிழிய சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசியலில் நமது சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது, எனவே தான் அதை மீட்க களமிறங்கப்போகிறோம் என களமிறங்கியவர்கள் கேவலப்பட்டு நிற்கிறார்கள். காலங்காலமாக முஸ்லீம் லீக் அல்லது இஸ்லாமிய கட்சிகள் வாங்கி வந்த 4 அல்லது 5சீட்டுக்களுக்கும் ஆபத்தை உண்டு பண்ண புறப்பட்டிருக்கும் புதிய படை தான் இந்த கழகம். கலைஞரிடம் அவமானப்பட்டு விட்டு இப்போது ஜெயலலிதாவிடம் பல்லைக்காட்டி 3 சீட்டு பெற்றிருக்கும் கழகத்தினர் யாருக்காக உழைக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. சமுதாயத்தை அடகுவைத்து எங்களின் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இவ்வளவு பிரதி நிதித்துவம் போதும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் மமகவினர். அப்படியே 3 இடங்களில் போட்டியிட்டாலும் அது நிச்சயமாக எதிர்கட்சியில் முஸ்லீம்கள் நிறுத்தப்படும் தொகுதியாகத்தான் இருக்குமே தவிர இவர்கள் போய் புதிதாக முஸ்லீம்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தி விடப்போவதில்லை.


தூய தவ்ஹீத் கொள்கை தான் கழகத்தின் வளர்ச்சிக்குத் தடை, எனவே நீங்கள் இருக்கும் வரை நாங்கள் கல்லா கட்டமுடியாது, எனவே உங்கள் ஓரிறைக் கொள்கையை மூட்டை கட்டிக்கொண்டு வெளியேறிவிடுங்கள் என அன்றைக்கே தன் சுய நலத்திற்காக தவ்ஹீது கொள்கையை கைகழுவிய இந்தக் கூட்டம் இன்றைக்கு சமுதாய மானம் காக்க தேர்தல் நிதி கேட்டு நிற்கிறது. ஒரு நல்ல‌ அமைப்பின் செயல்பாட்டுக்கு நிதி தரலாம், ஏதேனும் பள்ளிவாசல் அமைப்பதற்கு நிதி தரலாம், மக்களுக்கு பயன் தரக்கூடிய காரியங்களுக்கு நிதி தரலாம்,சமுதாய நலன் சார்ந்த போரட்டங்களுக்கு நிதி தரலாம். ஆனால் ஒரு தனி நபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிதி தருவதற்கு மக்களுக்கு என்ன வந்தது? மக்களையெல்லாம் கேணயர்களாக்கி மடையர்களாக்குவதை யாரால் தான் ஏற்றுக்கொள்ள முடியும்?

நீங்கள் தேர்தலில் போட்டியிட்டு உங்களின் பல நாள் லட்சியத்தை அடைவதற்கு நாங்கள் ஏன் நிதி தர வேண்டும்? சாதாரணமாக கேட்டுப்பார்ப்பீர்கள், தராவிட்டால் உங்கள் வழக்கமான கட்டப்பஞ்சாயத்து பாணியில் மிரட்டிக்கேட்பீர்கள். இதெல்லாம் மக்களின் சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். கழகத்தின் நிரந்தர தலைவருக்கும், நிரந்தர பொதுச்செயலாளருக்கும் தேர்தலில் நிற்க ஆசையிருந்தால் உங்கள் சொந்த சொத்துக்களை விற்று அந்த ‍பணத்தில் போட்டியிடுங்கள் . அதை விடுத்து மக்களிடம் வசூல் செய்து அவர்கள் பணத்தில் போட்டிடுவதால் அவர்களுக்கு என்ன லாபம்? அதனால் வெற்றியடைந்தால் உங்களுக்குத் தான் லாபம்,தோல்வியடைந்தாலும் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. காரணம் தெருத்தெருவாக சென்று நிதி திரட்டி இரவு பகலாக உழைத்து உங்கள் வெற்றிக்கு போராடக்கூடியவன் அப்பாவித் தொன்டன் தானே!

உங்கள் அரசியல் நிலையை மக்கள் என்ன அறியாமலா இருக்கிறார்கள்?நீங்கள் எப்படியெல்லாம் அரசியல் செய்வீர்கள் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால்m,உங்களின் செயல்பாட்டினால் வெறுத்துப் போன, உங்களின் அறிவுரையால் அல்லாஹ்வின் ஆலயத்தை மூடுவதற்கு முழுமூச்சாய் பங்காற்றிய அதே ஊரைச்சார்ந்த உங்கள் இயக்கத்தின் முன்னாள் தங்கமுட்டையிடும் வாத்தாய் இருந்தவர், இன்றைக்கு ஆளும் கட்சியில் இருக்கிறாரா இல்லையா?

உங்கள் நிலையை என்ன மக்கள் உணராமலா இருக்கிறார்கள்? நாம் வாழும் தமிழ்நாட்டில் நமக்கு இட ஒதுக்கீடு தர வேண்டுமானால் அது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியால் நிச்சயமாக முடியும் என தெரிந்தும் நீங்கள் இங்கே கேட்டால் எங்கே கூட்டணிக்கு ஆபத்து வந்து விடுமோ எனக் கருதி உங்களின் போராட்டக் களத்தை டெல்லிக்கு மாற்றினீர்கள். தாம்பரத்திலே நடத்தப்பட்ட ஒரே ஒரு கண்துடைப்பு மாநாட்டைத் தவிர வேறு ஏதேனும் போரட்டம் நடத்தினீர்களா? இல்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் விலைபோகாத, வீரியமான, அரசுக்கு இம்சை தரக்கூடிய போராட்டங்கள் குறிப்பாக சிறை நிரப்பும் போராட்டம் காரணமாக வேறு வழியில்லாமல் ததஜ நிர்வாகிகளை அழைத்து இவர்கள் வகுத்து வைத்திருந்த முறைப்படி 3.5% இட ஒதுக்கீட்டை வழங்கியது தமிழக அரசு. இதை நாங்கள் சொல்லவில்லை. இந்த இயக்கத்தில் இருந்து மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டால் வெளியேற்றப்பட்டு இன்றைக்கு உங்களுக்கு விசிறி வீசிக்கொண்டிருக்கிறாரே! அவர் சொன்னது.

நீங்கள் என்ன செய்தீர்கள்? மனிதனுக்கு நன்றி செய்யாதவன் இறைவனுக்கு நன்றி செய்தவன் ஆக மாட்டான் என பேனரை வைத்து நேரு உள் விளையாட்டு அரங்கில் கலைஞருக்கு துதி பாடி பாராட்டு விழா நடத்தினீர்கள். அதுவும் நீங்கள் சீட்டுப் பொருக்குவதற்காக.

இடஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கிறது என கருணாநிதியே ஒப்புகொண்டும்,அதெல்லாம் இல்லை ரோஸ்டர் முறை தான் சரியானது என சப்பைக்கட்டு கட்டினீர்கள். வக்ப் வாரிய தலைவராக இருக்கும் போது ஆளும் கட்சியினர் மற்றும் சில தனியார்கள் செய்த‌ முறைகேடுகளை கண்டும் காணாமலும் விட்டு விட்டீர்கள். எவ்வளவு வக்பு நில ஆக்கிரமிப்பு, மதுரை வக்ப் கல்லூரி பணி நியமணத்தில் நடந்த கொடுமை இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்து விட்டு கடைசியில் கருணாநிதி உங்களை வெளியேற்றியதும், சமுதாய மானம் காக்க உங்களின் வக்ப் தலைவர் பத‌வியை ராஜினாமா செய்தீர்கள், இடஒதுக்கீட்டில் குறைபாடு என்றீர்கள்,தனியாக போட்டியிட்டு ஆளும்கட்சியை மண்ணைக் கவ்வ வைப்பதாக கூறினீர்கள். கடைசியில் மண்ணைக் கவ்வியது யார் என்பது நாடே அறிந்த விசயம்.

இப்போது மறுபடியும் மானம் காக்க அம்மாவுடன் கூட்டணி. 3 சீட்டுக்களைப் பெற்றது ராஜதந்திரம் என சப்பைக்கட்டு கட்டும் தலைவர் அவர்களே! எங்களுக்கு பதவி முக்கியமில்லை, சமுதாய நலன் தான் முக்கியம் என நீங்கள் அன்றைக்கு பேசிய பேச்சுக்கும், அரசியலில் சட்டசபையில் பிரதி நிதித்துவம் பெறுவது தான் முக்கியம் என இன்றைக்கு பேசும் பேச்சுக்கு கொஞ்சம் கூட பொருந்திப் போகவில்லையே! சுய நினைவோடு அல்லது சுயசிந்தனையோடு தான் பேசுகிறீர்களா?

கடைசியாக ஒன்று. நீங்கள் உண்மையிலேயே சமுதாய மானம் காக்க புறப்பட்டது உண்மையானால் நீங்களும், ஜனாப் ஹைதர் அவர்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து தமுமுகவில் இருக்கும் எத்தனையோ படித்த துடிப்பு மிக்க இளைஞர்கள் குறிப்பாக வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர்களை வரும் தேர்தலில் நிறுத்தி அவர்களுக்கு வெளியே இருந்து வழிகாட்ட‌ உங்களுக்கு திராணியிருக்கிறதா?

பொதுவாக நாடாளுமன்ற‌ தேர்த‌லுக்கு த‌ங்க‌ளை வேட்பாளராக‌ த‌குதியாக்கிக் கொண்டவ‌ர்க‌ள் திரும்ப ச‌ட்ட‌ம‌ன்ற‌த் தேர்த‌லில் போட்டியிட‌ வெட்கப்படுவார்கள் . அதேபோல க‌ழ‌க‌த்தின் த‌லைவ‌ரும்,பொதுச்செய‌லாள‌ரும் ஏற்க‌னவே நாட‌ளும‌ன்ற‌ வேட்பாள‌ர்க‌ளாக‌ த‌குதிய‌டைந்து விட்டார்க‌ள், என‌வே அவ‌ர்க‌ள் இனிமேல் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்தலில் போட்டியிட‌ மாட்டார்கள், காரணம் அவர்களுக்கு பதவி ஆசை என்பது துளியும் கிடையாது என‌ க‌ழ‌க‌த்தின் உண்மைத் தொண்‌ட‌ர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்க‌ள். அதுமட்டுமின்றி கழகத்தில் தகுதியுடைய நிறைய பேர் வேட்பாளர்களாக காத்திருக்கிறார்கள். எனவே கழகத்தின் தலைவரும், பொதுச்செயலாளரும் அவர்களுக்கு வழிவிட்டு இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய ஆசை அல்ல, உங்களுடைய கழகக் கண்மணிகளின் ஆசை.

காரணம் உங்களுடைய வழிகாட்டுதல் தமுமுகவிற்கு தேவை என அவர்கள் நினைக்கிறார்கள். ஏற்கனவே 3 சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை, தமிழ்நாடு மூனுசீட்டு முன்னேற்றக் கழகமாக மாற்றி விட்டீர்கள் என்ற கோபத்தில் இருக்கிறார்கள் உங்களுடைய தொண்டர்கள். அப்படிப்பட்ட உண்மைத் தொண்டர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தாமல் உங்கள் கழகத்தில் இருக்கும் நல்ல அறிவாளிகள் மற்றும் படிப்பாளிகளை முன்னிறுத்தி நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள். ஆனால் இது நடக்குமா? இதை அமல்படுத்தி உங்களுக்கு பதவி ஆசை இல்லை என நிறுபிக்க முடியுமா? திருச்சியில் இருந்து பல்லவனாக வரும் ரயில் சென்னையிலிருந்து வைகையாக திரும்பிப் போவதைப் போல தவழ்ந்து வந்தால் தமுமுக, மானம் காக்க வந்தால் அது மமக‌ என மக்களை இரட்டைபணி செய்பவர்களாக ஆக்கியிருக்கிறீர்கள்.

வந்து போகும் ரயிலுக்குத் தெரியாது, அது என்ன பெயரில் செயல்படுகிறது என்று. ஆனால் தமுமுகவில் இருக்கும் எத்தனைத் தொண்டர்களுக்கு மமக மீது ‍பற்று இருக்கிறது. பொதுக்குழுவில் கூட அவர்களின் கருத்துக்கு வாய்ப்புத் தராமல் நீங்கள் எழுதிக்கொண்டு வந்த தீர்மானங்களை வாசித்து விட்டு போய் விடுகிறீர்கள். உங்களின் பதவிக்காலம் எவ்வித நிபந்தனையும் இன்றி ஒரு வருட காலம் நீட்டிப்பதற்கு எத்தனை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கைதூக்கினார்கள் என்பதை, தேவைப்பட்டால் பொதுக்குழு வீடியோவை ஒருமுறை முழுமையாகப் பார்த்து தெரிந்து கொள்ளுதல் நலம். இனியாவது உங்களின் தொண்டர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். பாவம் உங்களை நம்பி நிற்கும் அப்பாவித் தொண்டர்கள்.

Monday, February 28, 2011

சமுதாய மானம் காக்க புறப்பட்ட ஒரு சமுதாய தலைவர்



கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் 32 பற்களும் தெரிய சிரிக்கிறார் சமுதாய மானம் காக்க புறப்பட்ட ஒரு சமுதாய தலைவர். கேவலம்3 சீட்டு கொடுத்ததற்கே இந்த சிரிப்பு என்றால் கொஞ்சம் அதிகமாக கொடுத்து இருந்தால் திருவாடுதுறை ஆதினத்திடம் ஆசிவாங்கியதைப் போல ஆசி வாங்கியிருப்பார் போலத் தெரிகிறது. முதலில் 15தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து விட்டு அதிலே 12 சீட்டு கேட்டார்களாம். பிறகு 12ல் இருந்து குறைத்து 7 க்கு வந்தார்களாம். அப்பறம் இன்னும் கொஞ்சம் குறைத்து 5க்கு வந்தார்களாம். அப்புறம் விடாப்புடியாக 5 தொகுதிதான் வேண்டும் என சிறுபிள்ளைகள் அடம்பிடிப்பது போல தரையில் உருண்டு புரண்டு அடம்பிடித்தார்களாம். ஆனால் இவர்களின் அழுகுரல்களைக் கேட்டு கொஞ்சம் கூட மனமிறங்காத கருணைத்தாய் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்தா 3 தான் தருவேன் என ரொம்ப கறாராய் சொல்லி விட்டாராம்.
யார்கிட்ட உட்றீங்கானும் ரீலு? ஏற்கனவே 2 சீட்டு வாங்குறது தான் சமுதாய மானம் என சொல்லி கலைஞரிடம் உங்கள் மாப்பிள்ளை மிடுக்கை காட்டினீர்கள். அவரும் உங்கள் பலத்தை நினைத்து பயந்து பயந்து ஒரு சீட்டு தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த ஒரு சீட்டில் யார் போட்டிடுவது என கழகத்தின் நிரந்தர தலைவருக்கும்,நிரந்தர பொதுச்செயலாளருக்கும் குடுமிபிடி சண்டை வந்து விடக்கூடாது என்பதற்காக 2 சீட்டாவது தாங்க என மறுபடியும் போய் கதவைத் தட்ட அவர்கள் உங்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைச்சாத்தி விட்டார்கள். அதற்குபிறகு தான் உங்களின் தனிபலத்தை நிறுபித்தீர்கள். அதாவது உங்கள் இயக்கத்திற்கு எத்தனை தொண்டர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியல் நீங்கள் வாங்கிய வாக்கு வங்கியின் மூலம் அம்பலமாக உங்கள் நிலை கண்டு சிரிக்காதவர்கள் யாருமில்லை.
இப்படி இருக்கையில் இந்த தேர்தலில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடன் இப்போது கூட்டணி சேர்ந்து கொண்டு இப்போது கொடுத்த 3 சீட்டை இப்படி கேவலமாக பல்லிளித்து வாங்கிக் கொண்டு போஸ் கொடுக்கிறீர்கள். இதுல வேற அண்ணன் பன்னீர் செல்வம் கையப் புடிச்சிக்கிட்டு கெஞ்சினாராம். அம்மாவைப்பத்தி தெரியாதவர்களிடம் வேண்டுமானால் உங்களின் கும்மாஞ்சி வேலைகள் பலிக்கும். கருணாநிதி வேண்டுமானால் இழுவை போட்டுப் பார்ப்பார். ஆனால் ஜெயாவைப் பொருத்தவரை வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என ஒரே போடாக போடக்கூடியவர் எனபது எல்லாருக்கும் தெரியும். வேனுமினா 3 சீட்ட வாங்கிக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் நடையைக்கட்டுங்கள் என அம்மா சொல்லியிருப்பார். உடனே கழகத்தின் நிரந்தர தலைவருக்கும், நிரந்தர பொதுச்செயலாளருக்கும் போட்டியிட 2 சீட்டு கிடைத்தால் போதும் என்ற ரீதியில் நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருப்பீர்கள். காரணம் உங்கள் சிரிப்பே ஆயிரம் கதை சொல்கிறது தலைவரே!

மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன் என்று தமுமுகவின் தளத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கு சால்ஜாப்பு சமாளிப்பு பதில்கள் அவர்கள் தளத்தில் இருக்கிறது. ஆனால் உண்மையாக இந்த கேள்விகளுக்கு அவர்கள் மனதில் என்ன நினைத்திருப்பார்கள் என்று கற்பனையான பதில்கள் இதோ.

கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?

ஏன்! ஏற்கனவே சமுதாய மானம் காக்கப்போறோமுனு சொல்லிக்கிட்டு குப்புற விழுந்து மீசையில் மண்ணு ஒட்டுனது போதாதா! மறுபடியும் இந்த அம்மாகிட்டையும் வம்ப இழுத்துட்டு வரிஞ்சிகட்ட்டிக்கிட்டு நின்னா என்ன ஆகும்னு நல்லா தெரியும். அதனால தான் வந்த வரைகும் லாபம்னு 3 வாங்கிக்கிட்டோம். நல்லவேளை இதுவாவது கெடச்ச்தே.

கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது,விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?

ஆமாம்! கூடுதல் தொகுதி வேண்டி அதிமுகவை கண்டித்து தாம்பரத்தில் சாலைமறியல் போராட்டம், மெரினாவிலே சிறை நிரப்பும் போராட்டம், சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம்,அவ்வைசண்முகம் சாலையில் அமைந்துள்ள‌ அதிமுக தலைமை அலுவலக வாசலில் உக்கார்ந்து கொண்டு யாரும் உள்ளே செல்லக்கூடாது என பாதைமறியல் போராட்டம். விமர்சிப்பவர்களைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதேபோல மக்களைப் பற்றியும் கவலையில்லை. எங்கள் கவலையெல்லாம் இந்தமுறையாவது கொஞ்சம் அதிகமா ஓட்டு வாங்கமுடியுமான்னு தான்.

கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?

முதலில் எங்களைக் காத்துக் கொள்கிறோம். அப்பறம் பாக்கலாம் சமுதாயம் குறித்து

கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..

ஆமா..ஆமா..கின்னஸ் சாதனை இல்லையா? சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களா? ஆனால் அவர்கள் எங்களுக்குஓட்டுபோடுவார்களா?

கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..

அப்படியா! பரவாயில்லையே! எங்களுக்கே தெரியாத விசயமெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! பேஷ்..பேஷ்..!

கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...

நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியை ஒப்பிடும் போது எங்களுக்கு 3 என்பது அதிகம் தான்.

கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...

நாங்க எப்பய்யா வேனாமுனு சொன்னோம்! இன்னொரு நாள் போயி பேசலாமுனு நெனைக்கும் போது தான் கலைஞர் கதவ சாத்திட்டாரே! அப்படியிருந்தும் தலைவர் துபாயில், பொதுச்செயலாளர் சவூதியிலும் இருப்பதால் அவர்கள் வந்து பேசுவார்கள் என அறிக்கையெல்லாம் விட்டுப்பார்த்தோம். ஆனால் எதற்குமே மசியவில்லை கலைஞர்

கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும், ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?

அதைப்பற்றியெல்லாம் கண்டுகொண்டால் காலத்தை ஓட்ட முடியுமா?அரசியல்னு வந்துட்டா இது போன்ற அம்புகளையெல்லாம் தாங்கித்தானே ஆகனும்.அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...,

முகவை அப்பாஸின் விளக்கம் சரியா

முகவை அப்பாஸின் விளக்கம் சரியா
முகவை அப்பாஸின் விளக்கம் என்ற தலைப்பிட்டு ஒரு செய்தி குழுமங்கள் வழியாகப் பரப்பப்பட்டு வருகிறது. அந்த விளக்கத்தைப் பார்க்கும் போது முகவை அப்பாஸுக்கு தவ்ஹீத் ஜமாஅத் அநீதி இழைத்து விட்டது என்று தான் மக்கள் புரிந்து கொள்வார்கள். எனவே அவரது விளக்கம் குறித்து பீஜே அவர்களிடம் கேட்ட விளக்கத்தை இங்கே நான் பதிவு செய்கிறேன்.
முகவை அப்பாஸின் விளக்கம் இது தான்.
சகோதரர் முகவை அப்பாஸின் உண்மை விளக்கம்.
அல்லாஹ்வின் திருப்பெயரால்...அன்பு சகோதருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த 2005 .ஜூலை மாத இறுதியில், மாதம் நான்காயிரம் சம்பளம் மற்றும் மாதம் ஐந்துநாள் விடுமுறை அந்த ஐந்து நாட்களில் நான் ஊர் சென்று வருவது[எனது குடும்பம் எனது ஊரில் இருந்தபடியால்] என்ற ஒப்பந்தத்தின் பேரில் நாம் தலைமையில் பணிக்கு சேர்ந்தோம். அங்கு எமக்கு பல்வேறு பணிகள் தரப்பட்டன அதில் ஒன்று தொலைபேசி தொடர்பு. அதாவது தலைமையின் தகவல்களை நிர்வாகிகள் கட்டளைப்படி மற்றவர்களுக்கு சொல்வது; வரும் அழைப்புகளை வரவேற்று யார் என்ன கோரிக்கை வைக்கிறார்கள் என்பதை உரிய நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதை தீர்த்து வைப்பது. இதற்காக ஒரு லேண்ட் லைன் போனும்-ஒரு மொபைல் போனும் எனது மேற்பார்வையில் தரப்பட்டது. இது போக எனது சொந்த உபயோகத்திற்காக ஒரு பழைய போனும் என்னிடம் உண்டு.
பின்னாளில் அது பழுதாகவே, பீஜேயின் மகன் முஹம்மது எனபவரின் கடையில் எனது சொந்த உபயோகத்திற்காக புதிய போன் ஒன்று வாங்கினேன். அதைப்பார்த்த பீஜே, என்ன அப்பாஸ் போன்லாம் புதுசா இருக்கு என்றார். அப்போது ஆமாண்ணே! நம்ம முஹம்மது கடையில்தான் வாங்கினேன் என்றேன். இதை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் எனது சொந்த உபயோகத்திற்காக ஒரு போன் என்னிடம் இருந்தது என்று நீங்கள் புரிந்து கொள்ளவே!
சரி விஷயத்திற்கு வருவோம்; அலுவலகத்திற்கு வரும் போனில் தொடர்பு கொள்பவர்களில் பெண்களும் உண்டு. அவர்கள் அவசியமான விஷயங்களை மட்டும் என்னிடம் சொல்வார்கள். அவர்கள் சொல்லும் தகவலை அடிப்படையாக கொண்டு நிர்வாகிகளிடம் தகவல் சொல்லி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இன்னொரு வகையான கால்கள் எனது பொறுப்பில் உள்ள அலுவலக மொபைலுக்கு வரும். அது பீஜே மற்றும் பாக்கர் இருவரும் தேவைப்படும்போது எனது பொறுப்பில் உள்ள அலுவலக் மொபைலுக்கு 'டைவேர்ட்' செய்யும் கால்கள். அது தான் எனது வாழ்க்கையையும் 'டைவேர்ட்' செய்தவை. ஆம் இந்த இரு 'பரிசுத்தவான்களுக்கு' பெரும்பாலும் பெண்களின் அழைப்பே வரும். அதுவும் குலைந்து பேசும் டைப் பெண்கள்' அதில் பீஜேயை பற்றி இங்கே குறிப்பிட இது சமயமில்லை. அவர் என்னை தொடர்ந்து சீண்டினால் பின்னர் அம்பலப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.
இதில் பாக்கருக்கு வந்த போனில் ஒரு பெண் பேசுகிறார். அவர் ஆரம்பமாகவே என்னை பாக்கர் என நினைத்துக்கொண்டு, 'என்னங்க போன் பண்றேன்நு சொன்னீங்க! எவ்ள நேரமா நான் காத்துக்கிட்டு இருக்கிறது? என்று சற்று கொஞ்சலாக கேட்டார். அப்போது நான் முகவை அப்பாஸ் என்று என்னை அறிமுகப்படுத்திய பின், நீங்கள் யார் பேசுகிறீர்கள்? உங்கள் விசயமாக பாக்கரிடம் என்ன சொல்லவேண்டும் என்று கேட்டேன். அதற்கு அந்த பெண் இல்லை நான் அவர்ட்டயே பேசிக்கிறேன் என்று கட பண்ணிவிட்டது. பின்பு ஒருநாள் இதுபோல் பாக்கர் நிர்வாக மீட்டிங்கில் இருந்தபோது என்னிடத்தில் போனை தந்து கால் வந்துச்சுனா யார்னு கேட்டு பிறகு என்னிடத்தில் சொல் என்றார். சற்று நேரத்தில் அந்த பெண் லைனில் வந்தது நான் பாக்கர் நிர்வாக மீட்டிங்கில் இருப்பதாகவும் என்ன சொல்லவேண்டும் என்றபோது, தனது பெயரை மட்டும் சொல்லி பாக்கரிடம் சொல்லுங்க அவருக்கு தெரியும் என்றது.
இவ்வாறாக அந்த பெண் பாக்கரை தொடர்பு கொள்ளும் பல சமயங்களில் சில சமயங்கள் நான் எடுக்கும் நிலை வரும்போது அந்த பெண் என்னோடு சகஜமாக தன்னை பற்றி கூறும் அளவுக்கு வந்துவிட்டார். அதாவது தான் ஒரு விதவை [கணவர் தற்கொலை செய்து கொண்டாராம்] என்றும் தனது இரு சகோதரிகள் மற்றும் தாய் ஆகியோரும் விதவை என்றும், தான் பாக்கரை தீவிரமாக காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் அதற்கு அப்பாசாகிய நீங்களும் ஹெல்ப் செயயவேண்டும் என்றார்கள். அப்போது நான் பாக்கரை நீங்கள் விரும்பலாம் ஆனால் பாக்கர் உங்களை விரும்புகிறாரா? என்று கேட்டேன். அதற்கு அந்த பெண், ஆம்! நான் அவருக்கு போனில் முத்தம் தந்துள்ளேன். அவர் என்னிடம் 'ஐஸ் குச்சி வேணுமா..? என்று கேட்கும் அளவுக்கு நாங்கள் நெருக்கம் என்றார் அந்த பெண்.
அப்போது நான் இல்லை நான் நம்ப மாட்டேன் பாக்கர் அப்படிப்பட்டவர் அல்ல என்றேன். உடனே அந்த பெண் பாக்கர் தனக்கு அனுப்பிய ஒரு மேஜெசை எனக்கு பார்வேர்ட் செய்தது. அதில் பாக்கர் என்னில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு ரோஜா பூவும், ரோஸ் பார் யூ என்ற வாசகமும் இருந்தது. பின்னாளில் அலுவலகம் எனக்கு தந்த மொபைலுக்கே அந்த பெண் போன் செய்து பேச ஆரம்பித்து விட்டது. நான் பாக்கருக்கு போன் பண்ணுனேன் அந்த லூசு எடுக்க மாட்டக்குது என்று சொன்னார்கள் நான் தெரியாது என்றேன்.
பிறகு காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு நான் பாக்கருடன் சென்றுகொண்டிருக்கும் போது எனக்கு அந்த பெண் போன் செய்து பாக்கர் எங்கே என்றது? நான் பாக்கருடன் காஞ்சிபுரம் போய்க்கொண்டு இருக்கிறோம் என்றேன். அதற்கு பாகர் என்னை விரும்புகிறார்ன்னு சொன்ன நம்ப மாட்டீங்கன்னு சொல்ரீங்கள்ள இப்ப பாருங்க நான் பாகக்ருடன் பேசுறேன் பாருங்க என்று சொல்லிவிட்டு அடுத்த் நொடியே பாக்க்கரின் லைனில் வந்தது. பாக்கர் அப்பெண்ணுடன் ஒருமையில் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது எனக்கு புரிந்துவிட்டது.
எனவே பின்னொருநாள் அந்த பெண் எனக்கு போன் செய்து தனது போட்டோ மட்டும் பயோடேட்டாவை அனுப்பியிருப்பதாகவும் அதை பாக்கரிடம் சேர்த்து விடுமாறும் சொன்னது. [தலைமையின் தபால் போக்குவரத்தும் எனது பணியே] அந்த தபால் வந்தவுடன் அதை பாக்கரிடம் கொடுத்தவுடன் அவர் எங்கள் முன்பாகவே அதை பிரித்து பார்த்தார் அப்போது நான் என்னன்னே! ரெண்டாவதா முடிச்சுர வேண்டியதுதானே என்றேன். அப்போது அவர், என் மனைவியின் இடத்தில் வேறு யாரையும் கொண்டு வரமாட்டேன் என்றார். அப்போது தான் எனக்கு பிடிபட்டது ஆகா!
இவர் அந்த பெண்ணுடன் கடலை போடுவதற்காக பயன்படுத்துகிறார் என்று. மறுபுறம் பாக்கரை படு தீவிரமாக அந்த பெண் காதலித்து கொண்டும் பாக்குடன் வாழ்வதாகவே கற்பனை பண்ணிக்கொண்டும் இருக்கிறது. எனவே அடுத்த முறை எனது லைனுக்கு வந்தபோது, நான் பட்டுபடாமல் பாக்கரின் செய்தியை சொன்னேன் அதாவது பாக்கர் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு வசதியும் மார்க்க அனுமதியும் இருந்தாலும் அவர்கள பெரும்பாலும் ரெண்டாவது திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் காரணம் சமுதாயத்தில் அவர்களது இமேஜ் பாதிக்கப்படும் என்று கருதுவார்கள் என்று சொன்னேன் அப்போது புரிந்துகொண்ட அந்த பெண் அழுதுகொண்டே எனது முதல் கணவர்முடிவுதானா அப்படியாகி விட்டது என்றால் நான் ஆசைப்பட்டது எல்லாமே தோல்வியில் முடிந்தால் ஒரு பெண்ணால் எப்டி தாங்கி கொள்ளமுடியும் என்றது. எனக்கோ பரிதாபமாக இருந்தது ஆறுதல் சொல்லிவிட்டு லைனை துண்டித்தேன்.
அதுவரை அந்த பெண்ணின் மீது எனக்கு எந்த கெட்ட எண்ணமும் இருந்ததில்லை. அந்த பெண்ணின் பரிதாப நிலை அவர்கள் குடும்பத்தில் அனைவரும் விதவை எனற நிலை எனவே நாம் ஏன் அந்த பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று எனது உள்ளத்தில் அப்போது உதித்தது. அதை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தியபோது ஆரம்பத்தில் கடுமையாக மறுத்தாலும் பாக்கர் திருமணம் செய்யமாட்டார் என்பது உறுதியான நிலையில் நம் ஏன் அவரை நினைத்து கொண்டிருக்கவேண்டும் என்ற மனநிலைக்கு அந்த பெண் வந்து ஒரு நாள் எனக்கு போன் செய்து அப்பாஸ் நான் உங்களை விரும்புகிறேன் என்றது. பிறகு எங்கள் இருவருள்ளும் போன் தொடர்பு ஏற்பட்டது எனது சொந்த போனில் இருவரும் பேசிக்கொள்வோம். இதற்காக இரு நம்பர்களுக்கு மத்தியில் ஒரு நிமிடத்திற்கு பத்து பைசா எனும் திட்டம் உள்ள சிம் வாங்கி அந்த பெண்ணுக்கு அனுப்பினேன். எங்கள் இருவரது நம்பரும் அடுத்தடுத்த நம்பர்கள்.நாங்கள் இருவரும் எனது சொந்த போனில் மட்டுமே பேசிக்கொள்வோம். இதற்கிடையில் அந்த பெண்ணின் தாயாரிடம் போனில் பேசி எங்கள் திருமணத்திற்கு சம்மதமும் பெற்றுவிட்டேன்.
அந்த நேரத்தில்தான் ஷைத்தான் தான் கைவரிசையை காட்டினான்.கல்யாணம் உறுதி என்றதும் நாங்கள் நெருக்கமாக பேசிக்கொள்ள தொடங்கினோம். அப்படித்தான் ஒருநாள் இரவில் அந்த பெண் மிஸ்கால் தர நான் எனது சொந்த மொபையிலில் இருந்து பேசினேன் காசு தீர்ந்துவிட்டது. எனவே அலுவலக லேண்ட் லைனில் பேசினேன் இது போன்று சில நாட்கள் தொடர்ந்தது. அப்போது எத்தனை நிமிடம் அலுவலக போனில் பேசினோம் என்பதை கணக்கிட்டு, அலுவலக கணக்காளராக இருந்த மதுரை பெரியவரிடம் நான் காசு கொடுத்துவிடுவேன்.அவ்வாறு கடைசியாக சில நாட்கள் பேசப்பட்ட தொகை சுமார் முன்னூறு ரூபாய்கள் அளவுக்கு தரவேண்டிய தொகை தருவதற்கு உள்ளாகவே நான் எனது ஊருக்கு சென்றுவிட்டேன்.
நான் ஊருக்கு சென்ற பின்னால் பில் வந்தபோது அதுதான் சர்ச்சையாகி இப்போது பல நாள்,பலமணி நேரம் என்று பீஜே கதை விட காரணமாகிவிட்டது. இதற்கிடையில் அந்த பெண்ணிடம் நான் ஒரு நிபந்தனை விதித்தேன். அதாவது நீங்கள் பாக்கர் உள்ளிட்ட ய்யாரிடமும் போனில் பேசக்கூடாது என்று. சரி! என்று அப்பெண்ணும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டது. ஆனால் பாக்கர் அவர் தம்பி நானா உள்ளிட்ட சிலருடன் பேசியதை நான் அறிந்துகொண்டேன், எனவே இதையொட்டி எனக்கும் அப்பெண்ணுக்கும் மனக்கசப்பு தோன்றி மறையும்.
இதற்கிடையில் அலுவலகத்தில் நிர்வாகிகளுக்கென ஒவ்வொரு சிம் வழங்கப்பட்டு இருந்தது அதற்கு அடிப்படை வாடகை மட்டும் அலுவலகம் கட்டும்[பீஜேவுக்கு விதிவிலக்கு] கூடுதலாக வரும் கட்டணத்தை சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் கட்டவேண்டும் என்ற நிபந்தனை. பின்னாளில் அலுவலகம் எந்த கட்டணமும் கட்டாது மொத்த பில்லையும்சம்மந்தப்பட்டவர்தான் கட்டவேண்டும் என்று அறிவிக்கப்பட்டவுடன் பெரும்பாலான நிர்வாகிகள் சிம்மை அலுவலகத்தில் ஒப்படைத்து 'கேன்சல்' செய்யுமாறு கூறிவிட்டனர். அவ்வாறு பாக்கரும் தனது சிம்மை என்னிடம் தந்துவிட்டு துபாய் சென்றுவிட்டார். நான் அந்த சிம்மை எனது போனில் போட்டு இந்த பெண் பாக்கரை தொடர்பு கொண்டுள்ளதா என்று பார்த்தேன். அப்போது அந்த பெண் பாக்கருக்கு அனுப்பிய கண்ணோடும் நெஞ்சோடும் என்று காதல் ரசம் பொழியும் கவிதையை பார்த்தேன் உடனே அப்பெண்ணுக்கு போன் செய்து அல்லாஹ்வின் மீது சத்தியமாக பேசமாட்டேன் என்றாய் ஆனால் இப்படி கவிதை அனுப்பியுல்லாயே என்றேன் அதையொட்டி எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு நிரந்தர பிரிவுக்கு வழிவகுத்தது.
அதற்காக் அந்த பெண் ஒழுக்கம் சரியில்லாதவர் என்று கூறமாட்டேன். ஆனால் பாக்கரை அந்த பெண்ணால் மறக்க முடியவில்லை என்பதும், நானா உள்ளிட்ட பலரிடம் வெட்டியாக பேசுவதும் அந்த பெண்ணின் பலவீனம். அது எனக்கு பிடிக்கவில்லை. இதற்கிடையில் ஊருக்கு சென்ற நான் சிக்குன் குனியா நோயினால் பாதிக்கபப்ட பணிக்கு திரும்ப பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதற்குள் டெலிபோன் பில் பீஜேயின் பார்வைக்கு போய் அவர் பாக்கரிடம் சொல்லி பாகருக்கு அது அறிமுகமான நம்பர் என்பதனால் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கேட்க, என் மேல் தப்பில்லை. அப்பாஸ் தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று டார்ச்சர் பண்ணினார் என்று பல்டியத்த்துவிட்டது.
நான் ஊரில் இருந்து வந்தவுடன் பாக்கர் என்னை தக்வா ஹஜ் சர்வீசுக்கு அழைத்தார். அங்கு ஒரு அறையில் கோவை ஜாபருடன் இருந்தார்.வேறு யாரும் அங்கு இல்லை. பின்பு பாக்கர் என்னிடம், என்ன அப்பாஸ் நீங்க எவ்வளவு பெரிய பொறுப்புல இருக்கீங்க! ஒங்களுக்கு குடும்பமும் இருக்குது நீங்க இப்படி செய்யலாமா? என்று இந்த போன் விஷயத்தை சொன்னார். அதோடு அந்த பொண்ணு நல்லவ இல்ல அப்பாஸ் மொதல்ல என்னிட்ட கடலை போட்டா!. ! இப்ப என் தம்பி [நானா] அவளை தொரத்திக்கிட்டு திரியிறான் என்றார்.
அப்போது நான், அண்ணே நான் அந்த பெண்ணிடம் போனில் பேசியது உண்மை கல்யாணம் பண்ணிக்கிரணும் என்றுதான் பேசினேன். ஆனாலும் நான் வகித்த பதவிக்கு உரிய தகுதியை இழந்துவிட்டேன். எனவே நான் விலகிக்கொள்கிறேன் என்றேன். உடனே பாக்கர் அப்பாஸ் நீங்க எங்க போகப்போறிங்க பேசாம இருங்க தப்பு பன்றது மனித இயல்புதான், இந்த விசாரணையை நீங்க திருந்திக்கிற ஒரு வாய்ப்பா எடுத்துக்கங்க! எனவே நீங்க வழக்கம்போல் பணியை செய்யுங்க. நீங்க ஆபிஸ் போன்ல பேசுன தொகையை அலுவலகத்துல கட்டிடுங்க! ஆனா கொஞ்ச நாளைக்கு போன் மட்டும் நீங்க அட்டன் பன்னவேனாம் என்றார். மற்ற பணிகள் அனைத்தையும் செய்யுங்க என்றார்.
எனவே மீண்டும் நாம் சுமார் இரு மாதங்கள் வரை பணியில் இருந்தோம். பணியில் இருக்கும் போதே வெளிநாடு போவதற்காக ஒரு தவ்ஹீத் சகோதரரிடம் பாஸ்போர்ட்டை தந்து இருந்தோம். இதற்கிடையில் ஹஜ் பெருநாள் வருகிறது. அதற்கு நான் ஊருக்கு போகவேண்டும் என்று அலுவலக பொறுப்பாளர் தவ்பீக் இடம் நான் லீவ் லெட்டர் தருகிறேன் அப்போது அவர் ஆள் இல்லையே, சுபைர் போறார் இக்பால் லீவு வேனும்கிறார், மதுரை பெரியவர் போறார் எனவே ஆள் இல்லை என்கிறார் நான் வலியுறுத்தி கேட்டபின் ஐந்து நாட்கள் லீவு தருகிறார். நான் ஹஜ் பெருநாளைக்கு ஊருக்கு போகிறேன். ஊரில் இருக்கும் நிலையில் எனது வெளிநாடு பயணத்திற்காக திருச்சி போகுமாறு ஏஜென்ட் சொல்கிறார் நான் திருச்சி போய் விட்டு வந்த பின் இன்னும் ஒரு மாதத்திற்கு உள்ளாக பயணம் என்கிறார் ஏஜென்ட். அப்போது நான் தவ்பீக்குக்கு போன் செய்து நான் ஒரு மாதத்தில் பயணம் செல்ல வேண்டியிருக்கும் எனவே நான் தலைமைக்கு வந்தாலும் ஒரு மாதம்தான் வேலை பார்க்கமுடியும் எனவெ நான் வரவேண்டும் என்று நீங்கள் சொன்னால் வருகிறேன் என்றேன் .
அதற்கு அவர், இருங்க பாக்கரிடம் கேட்டு சொல்றேன் என்று சொன்னவர் அடுத்த ஐந்து நிமிடத்தி;ல் எனக்கு போன் செய்தார். நான் பாக்கர் இடம் கேட்டேன் அவர் ஒரு மாதம் வந்து என்ன செய்ய அதுனால வெளிநாடு போறவன் குடும்பத்தோட இருக்கட்டும்னு சொல்லிட்டாரு என்று தவ்பீக் சொல்லிவிட்டு நீங்கள் முறைப்படி ஒரு ராஜினமா கடிதம் அநிப்பி வைச்சிருங்க என்று சொல்றார். நான் ஒரு ராஜினாமா கடிதம் அனுப்பிவைத்தேன். பின்பு வெளிநாடு விஷயமாக நான் சென்னை வந்தபோது சென்னையில் அலுவலகத்தில் ஒருமுறை பாக்கரை சந்தித்தபோது அண்ணன் மறுபடியும் ஒங்களை ரீகால் அதாவது திரும்ப கூப்புட சொல்றாக என்றார்! அப்ப நான் அண்ணே! velinaattu பயணத்தில் இறுதி கட்டத்தில் நான் இருக்கிறேன் என்றேன். சரி பரவாயில்லை என்றார்.
பின்பு நான் பயணத்தின்போது அலுவலகத்தில் பீஜே முனிர் சித்தீக் பாக்கர் உள்ளிட்ட சில நிர்வாகிகளை சந்தித்து பயணம் சொல்கிறேன் அப்போது பீஜே, அருகில் இருந்த சுபைர் என்பவரிடம் அப்பாசை நம்ம ஆபீஸ் வண்டியில் ஏர்போர்ட்டுல விட்டுட்டு வர ஏற்பாடு செய்யுங்க என்கிறார். அதோடு என்னிடம் நீங்க குவைத் ததஜ வுக்கு தலைவர் ஆகி விடுங்க என்கிறார்.பின்பு அலுவலக காரில் நான் விமான நிலையம் வந்து குவைத் வந்தேன்.
இதன் மூலம் நான் சொல்ல வருவதும் கேட்க விரும்புவதும்;
• நான் அலுவலக போனில் பேசியதை மறுக்கவில்லை. அதற்கு நான் பணம் கட்டியுள்ளேன் . அதை மறைத்து நான் ஆபீஸ் போன் கட்டணம் உயர காரணமாக இருந்தேன் என்று பீஜே சொல்வது சரியா?
• நான் அந்த பெண்ணை திருமணம் செய்யும் நோக்கில்தான் பேசிக்கொண்டோம். ஆனாலும் ஏனோ அது நிறைவேறவில்லை. இருப்பினும் திருமணம் ஆகும்வரை அந்த பெண் எனக்கு அந்நிய பெண்தான் என்பதை நான் மறந்தது தப்புதான்.
• மேற்கண்ட விசாரணைக்கு பிறக்கும் நான் ஆபீஸில் பணியாற்றி பின்பு வெளிநாடு பயணத்திற்காக ராஜினாமா செய்திருக்க, எண்ணி இழிவு படுத்த வேண்டாம் நானாக விலகிக்கொள்கிறேன் என்று நான் கூறியதாகவும் அதனால் கண்ணியமாக விடுவித்தோம் என்று பீஜே கூறுவது அப்பட்டமான பொய்யல்லவா?
• பீஜேயின் கூற்றுப்படி குற்றவாளியான எனக்கு எதற்கு அலுவலக கார் ஏற்பாடு செய்தார்?
• பீஜேயின் கூற்றுப்படி 'பாக்கரிசம்' உடைய என்னை எதற்காக குவைத் ததஜ தலைவர் ஆக சொன்னார்..?
• குவைத் நிர்வாகிகளிடம் பலமுறை என்னை பற்றி விசாரித்ததோடு, அப்பாஸ் ஜமாத்துக்காக பாடுபட்ட ஆள். அவரை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஏன் பீஜே சொன்னார்?
• அந்த விசாரணையின் போது நானே விலகிக்கொள்கிறேன் என்று சொன்ன போது இல்லை நீங்கள் மீண்டும் பணி செய்யுங்கள் என்று சொன்ன பாக்கர் இன்று நான் நீக்கப்பட்டதாக கூறுவது பொய்யல்லவா?
• நான் அந்த பெண்ணுடன் திருமணம் செய்யும் நோக்கில் பேசியிருந்தாலும் அந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட காரணம் பாக்கரின் லீலையல்லவா?, இப்போது அவர் பரிசுத்தவான் போலவும் இறக்கப்பட்டு வாழ்க்கை கொடுக்க நினைத்த நான் குற்றவாளி போலவும் பாக்கர் சொல்வது தவறல்லவா?
• குறிப்பு; இதில் சொல்லப்பட்டவைகள் கால சூழ்நிலை மாறி இருக்கலாம். ஆனால் சொன்ன செய்தி அனைத்தும் உண்மை .
இதில் சொல்லாத பல உண்மைகளும் உண்டு,
மேற்கண்ட செய்திக்கு பீஜேயின் விளக்கம்
முகவை அப்பாஸ் சொல்லக்கூடிய செய்தி உண்மை என்றால் அவரை விட பாக்கர் தான் அதிக நடவடிக்கைக்கு உரியவராகிறார்.
சுனாமி நிதி சம்மந்தமாக பாக்கர் மீது குற்றச்சாட்டு வந்த பின் நிதியாதாரங்களை நான் தான் கையாண்டு வந்தேன். அதே நேரத்தில் அலுவலக ஊழியர்கள் தொடர்பான பொறுப்பு அப்போது பாக்கரிடம் இருந்தது.
லேண்ட் லைன் தொலைபேசி பில் என் பார்வைக்கு வந்த போது குறிப்பிட்ட் ஒரு எண்ணுக்கு நள்ளிரவு நேரத்தில் பல தடவை போன் போடப்பட்டது அந்த பில்லில் இருந்து தெரிந்தது.
எனவே இது குறித்து அலுவலக ஊழியர் விஷயத்தில் பொறுப்பாளராக இருந்த பாக்கரிடம் நான் இது குறித்து தெரிவித்தேன். நள்ளிரவில் பேசப்பட்டுள்ளதால் அது நிச்சயம் ஜமாஅத் பணியாக இருக்காது. அதுவும் விசாரிக்கப்பட வேண்டும். அத்துடன் ஜமாஅதின் நிதியாதாரம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் விசாரிக்க வேண்டும். நீங்கள் விசாரிக்கிறீர்களா? நான் விசாரிக்கட்டுமா என்று நான் பாக்கரிடம் கேட்டேன். அவர் பில்லை வாங்கிப் பார்த்து விட்டு அதை என்னிடம் விட்டு விடுங்கள். நான் விச்சரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று பாக்கர் கூறினார். அதன் பிறகு நான் அதை விட்டு விட்டேன்.
அவனை அப்பாஸை கடுமையாக எச்சரித்து விட்டேன். அவன் பணியில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்து விட்டேன். அவன் யாரிடம் பேசினான் என்பதைக் கண்டு பிடித்து விட்டேன். ஒரு பெண்ணிடம் தகாத முறையில் பேசுவதற்கு ஆபீஸ் போனை அவன் பயன்படுத்தியுள்ளான். அவன் ராஜினாமா செய்து விட்டு போய் விடுவான். அதற்கு சின்ன அவகாசம் கேட்டுள்ளான். இனி போனை அட்டன் பண்ணக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவனுக்கு சிறிது அவகாசம் கொடுத்துள்ளேன் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பாக்கர் என்னிடம் தெரிவித்தார்.
ஆனால் அப்பாஸ் இப்போது கூறிய செய்திகளை என்னிடம் அப்போதே கூறியிருக்க வேண்டும். அதுவும் அவரது சொந்த அலுவலகத்துக்கு வரச் செய்து பாக்கர் விசாரித்ததும் அவருடைய பாலியல் தொடர்பும் என் கவனத்துக்கு அப்பாஸ் கொண்டு வந்திருக்க வேண்டும். அப்பாஸின் இந்த விளக்கத்தை நான் பார்க்கும் வரை இந்த விஷயம் எனக்குத் தெரியாது. ஆனால் அப்பாஸின் விளக்கத்தைப் பார்த்த பின் கலீல் ரசூலிடம் இப்படி ஒரு மெயில் வந்துள்ளது என்று பேசிக் கொண்டிருந்த இந்த விஷயம் ஆபீஸில் பணியாற்றிய ஜுபைர் மூலம் எனக்கு முன்னரே தெரியும் என்றார்.
எனவே இந்த விஷயத்தை அப்பாஸ் அப்போதே என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும்,. அவர் தெரிவிக்காவிட்டால் பாக்கர் என்னிடம் தெரிவித்த செய்தி மட்டும் தான் எனக்குக் கிடைக்கும் என்பதைக் கூட அவர் ஏன் புரிந்து கொள்ளவில்லை.
இப்போது பாக்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அப்போதே எடுக்கப்பட்டிருக்கும்.
பாக்கர் எனக்குச் சொன்ன தகவல் நடவடிக்கை எடுத்து அவனை நீக்கி விட்டேன். சிறிது அவகாசம் கொடுத்துள்ளேன் என்பது தான்.+
அப்பாஸ் தரப்பு செய்தி எனக்குத் தெரியாத போது அவர் என்னை அன்றாடம் சந்தித்து பேசும் வாய்ப்பில் இருந்தும் என்னிடம் சொல்லத் தவறியதால் மனிதன் என்ற முறையில் பாக்கர் சொல்வதைத் தான் நான் நம்ப முடியும்.
பொதுவாக ஜமாஅத்தில் இருந்து சில காரணங்களுக்காக சிலர் நீக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நீக்கப்பட்ட யார் மீதும் நான் வெறுப்புக்காட்டுவதில்லை. தவறுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்குக் கட்டுப்பட்டு ஜமாஅத்துக்கு எதிராக செயல்படாதவாரை நான் அவர்களுடன் கருணையோடு தான் நடந்து கொண்டிருக்கிறேன். நான் யாரையாவது பணியில் இருந்து நீக்கினால் அவரை அழைத்து ஜமாஅத் தலைவன் என்ற முறையில் இது என் மீது கடமை. ஆனால் இதனால் உங்கள் வருவாய் பாதிக்கப்படலாம். வேறு நிறுவனங்களில் உங்களைச் சேர்த்து விடட்டுமா? அல்லது வேறு வேலை கிடைக்கும் வரை உங்களுக்கு உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யட்டுமா எனக் கேட்டு அதற்கேற்ப செய்தும் கொடுத்த்யுள்ளேன்.
எனக்கு பாக்கர் சொன்ன தகவல் படி அப்பாஸ் நீக்கப்பட்டவர் என்பது தான். ஆனாலும் அவர் செய்த பணிகளை நினைவு கூர்ந்து அவரது தேவைகள் பற்றி விசாரித்தேன். சொந்த வெறுப்பினால் இந்த நடவடிக்கை என்று அவர் நினைத்து விடக் கூடாது இதன் காரணமாக கொள்கையை விட்டு போகக் கூடாது என்பதற்காக அவர் குறிப்பிட்டது போல் அவரை மரியாதையாக நடத்தியது உண்மை தான். அவர்கள் இயக்கத்துக்கு எதிராகப் போகாதவரை இப்படி நடப்பது தான் என் இயல்பு. அப்பாஸ் ஜமாஅத்தில் வாங்கியிருந்த கடன் தொகையை தந்து விடுவதாக அவர் கூறிய போதும் வேலை இல்லாமல் இருக்கும் நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்று கூறி அதற்கும் மாற்று ஏற்பாடு செய்தேன். இது என் இயல்பு. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தான் நான் கருதினேன் என்பதற்கு இது முரண் இல்லை. இது தான் என் இயல்பு.
நான் பொறுப்பில் இருந்து விலகிய பின் ஒரு ஊழியர் புது நிர்வாகத்தால் திடீரென நீக்கப்பட்டது என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நிர்வாகத்தில் நான் தலையிடக் கூடாது என்பதால் நீக்கப்பட்டவருக்கு தகுதியான ஒரு வேலையை ஏற்பாடு செய்து அவரை அழைத்து இதைத் தெரிவித்தேன். ஆனால் அவர் அதை விட அதிக சம்பளத்தில் வேறு வேலை கிடைத்து விட்டதாக கூறி விட்டார். என் இயல்பு இது தான் என்பதற்கு இதைக் கூறுகிறேன்.
இதெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கும் என்று அப்பாஸ் கருதியிருக்கிறார் என்பதும், இவர்களே கேடு கெட்டவர்களாக இருந்து கொண்டு என்னை நீக்கி விட்டார்களே என்னை விசாரிக்கிறார்களே என்று அவர் கருதியதால் ஜமாஅத் மீது வெறுப்பில் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. எனக்கு இந்த விபரங்கள் தெரிந்து நான் பாக்கருக்கு உடந்தையாக இருந்தால் தான் அவரது பார்வை சரியானதாக இருக்கும்.
நீக்கப்பட்டவரை விட நீக்க்கியவர் மோசமானவர் எனும் போது இது அப்பாஸுக்கு இழைக்கப்பட்ட அநீதி தான். ஆனால் அந்த அநீதி அவராகத் தேடிக் கொண்டது தான். பாக்கரைக் காப்பாற்றுவதற்காக அவர் ஏன் பழியைச் சுமக்க வேண்டும்? பாக்கரையும் கேள்வி கேட்கும் பொறுப்பில் நான் இருக்கும் போது அதை ஏன் என்னிடம் முறையிடத் தவற வேண்டும்?
போகிற போக்கில் அப்பாஸ் என் மீதும் குற்றம் சுமத்தும் வகையில் சில சொற்களை பயன்படுத்தியுள்ளார். பாக்கர் போல் என்னையும் சித்தரிக்கும் வகையில் அந்த வார்த்தை உள்ளது. பாக்கரைப் போல் என் மீது எதுவும் ஆதாரம் இருந்தால் அவர் தாராளமாக வெளிப்படுத்தலாம் என்பது தான் இதற்கான பதிலாகும்.
இவ்வாறு பீஜே தெரிவித்தார்